மேலும் அறிய

Income Tax Notice: இதெல்லாம் செஞ்சா வருமான வரி நோட்டீஸ் வரலாம்..! உங்களுக்கான வரம்புகள் என்ன?

Income Tax Notice: தனிநபர் என்ன மாதிரியான பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், வருமான வரித்துறையின் நோட்டீஸை எதிர்கொள்ள நேரிடும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Income Tax Notice: தனிநபரின் வங்கி வைப்பு, பரஸ்பர நிதி முதலீடுகள், சொத்து பரிவர்த்தனைகள் மற்றும் பங்கு வர்த்தகம் போன்ற பண பரிவர்த்தனைகள் வருமான வரியின் கண்காணிப்பின் கீழ் வருகின்றன.

வருமான வரித்துறை கண்காணிப்பு:

வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்தாத நபர்கள், சில நேரங்களில் தங்கள் வருமானத்தை விட அதிக அளவு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்காக இந்த பரிவர்த்தனைகளை செய்கிறோம். ஆனால் இவை வருமான வரித்துறையின் நோட்டிஸ்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  பல நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வழிகளில் மக்கள் செலுத்தும் கொடுப்பனவுகளை சேகரிக்கப்பட்டு அரசால் கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் இந்தத் தரவை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கண்காணிக்கிறார்கள். குறிப்பாக வங்கி வைப்பு, பரஸ்பர நிதி முதலீடுகள், சொத்து பரிவர்த்தனைகள், பங்கு வர்த்தகம், கிரெடிட் கார்டு கொடுப்பனவுகள் போன்ற பண பரிவர்த்தனைகள் எப்போதும் கண்காணிப்பில் இருக்கும். எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது இவற்றின் விவரங்கள் வழங்கப்பட வேண்டும். தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.  எனவே இவை தொடர்பான வரம்புகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள்:


ஒரு நிதியாண்டில் யாராவது ஒருவர் சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்கும் அல்லது நடப்பு வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்தால் அந்த விவரங்களை வருமான வரித் துறைக்கு வங்கிகள் அனுப்பும். மேலும், ஒரே பரிவர்த்தனையில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

நிலையான வைப்பு (FXED DEPOSIT):

வங்கியின் நிலையான வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் உயர்ந்ததால், பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இதில் முதலீடு செய்கின்றனர்.  வரித் துறையின் பண வைப்புகள் பற்றிய தகவல் தெரிவிப்பதற்கான தற்போதைய வரம்பு ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சமாக உள்ளது. தனிநபர்கள் பல வங்கிகளில் ஒட்டுமொத்தமாக சேர்த்து ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், அது வரி அதிகாரிகளின் கவனத்திற்கு வரும். இந்த வரம்பை மீறுவது வரி ஏய்ப்பைக் குறிக்காது. ஆனால் வரித் துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தேவைப்படுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 

ரொக்கக் கொடுப்பனவுகள்:

வங்கி வரைவுகள், பே ஆர்டர்கள் அல்லது வங்கியாளரின் காசோலைகளை வாங்குவதற்கு பணம் அனுப்புதல் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளைப் பற்ற் தகவல் தெரிவிப்பதை, வங்கிகள் அல்லது கூட்டுறவுச் சங்கங்களுக்கு வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது.

கிரெடிட் கார்டு கொடுப்பனவுகள்:

கிரெடிட் கார்டு பில்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தும் விவரங்கள் வரி அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மேலும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள அனைத்து கிரெடிட் கார்டுகளிலும் பணமில்லா முறைகள் மூலம் செய்யப்படும் அனைத்து கட்டணங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். 

பிற காரணங்கள்:

உள்நாட்டு வணிக வகுப்பு விமானப் பயணம், கல்வி அல்லது நன்கொடைப் பணம், நகைகள், ஓவியங்கள், பளிங்குக் கற்கள், மின்சாரச் செலவுகள் ரூ.1 லட்சத்திற்கு மேல் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளுக்காக, நோட்டீஸ் அனுப்பவும் வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள்:

இந்தியாவில் ரூ. 30 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் அதற்கான நிதி ஆதாரத்தை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி நடவடிக்கைகளை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ரூ.50 லட்சத்துக்கும், கிராமப்புறங்களில் ரூ.20 லட்சத்துக்கும் நடந்த சொத்துப் பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறை கண்காணிக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget