By: குலசேகரன் முனிரத்தினம் | Updated at : 29 Feb 2024 08:05 PM (IST)
வருமான வரி தாக்கல்
ITR 2024: வீட்டு வாடகை அல்லது சொத்து விற்பனை மூலம் வருமானம் ஈட்டப்பட்டாலும், பொதுமக்களுக்கு வரி செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
குடியிருப்புத் துறையில் (ரியல் எஸ்டேட்) முதலீடு செய்ய எப்போதும், யாருமே தயங்குவதில்லை. ஏனென்றால் வீட்டை நம்புவது நீண்ட காலத்திற்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, உடனடி வருமானம் வாடகை வடிவில் தொடங்குகிறது. இரண்டாவது, சொத்தின் மதிப்பு காலப்போக்கில் அதிகரிக்கும், நீண்ட காலத்திற்கு பிறகு விற்றால், பெரிய தொகையை சம்பாதிக்கலாம். வீட்டுச் சொத்தின் மூலம் வருமானம் இருந்தால், அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். வாடகை மூலம் வருமானம் ஈட்டப்பட்டாலும் அல்லது சொத்து விற்கப்பட்டாலும், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வரி பொறுப்பு உள்ளது. அதேநேரம், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வரி பொறுப்பு வேறுபடும்.
வீட்டை விற்ற லாபம் மூலதன ஆதாயமாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மூலதன ஆதாயத்திற்கு இரண்டு வகையான வரிவிதிப்பு உள்ளது. வாங்கிய தேதியிலிருந்து 2 வருடங்கள் அல்லது அதற்கு மேல் வீட்டை விற்கும் லாபம் நீண்ட கால மூலதன ஆதாயமாக (LTCG) கருதப்படுகிறது. குறியீட்டு நன்மைக்குப் பிறகு மூலதன ஆதாயத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும். வாங்கிய தேதியிலிருந்து 24 மாதங்களுக்குள் வீடு விற்கப்பட்டால், ஆதாயம் குறுகிய கால மூலதன ஆதாயமாக (STCG) கணக்கிடப்படுகிறது. இந்த லாபம் வரி செலுத்துபவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட வேண்டும் மற்றும் மொத்த வருமானம் பொருந்தக்கூடிய ஸ்லேபின்படி வரி விதிக்கப்படும்.
சில சந்தர்ப்பங்களில், வீட்டை விற்றால் கிடைக்கும் ஆதாயம் வரிக்கு உட்பட்டது அல்ல. வருமான வரிச் சட்டத்தின் 54வது பிரிவின்படி, ஒரு வீட்டை விற்று மற்றொரு வீட்டை வாங்கினால் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது. இந்த நன்மை நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு மட்டுமே பொருந்தும். பிரிவு 54, மூலதன ஆதாயம் "குடியிருப்புச் சொத்தை வாங்க/கட்டமைக்க மட்டுமே" பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.
வணிக சொத்து வாங்குவதற்கு இந்த விதி பொருந்தாது. திறந்தவெளி மனை வாங்கி வீடு கட்டினாலும் இந்த விலக்கு பெறலாம். லாப வடிவில் கிடைக்கும் பணத்தில் ஓபன் பிளாட் வாங்கினால், இந்த பலனை பயன்படுத்த முடியாது, கண்டிப்பாக வீடு கட்ட வேண்டும். 2023-24 நிதியாண்டு முதல், குடியிருப்புச் சொத்தின் மூலதன ஆதாயத்தில் ரூ.10 கோடி வரை மட்டுமே வரிச் சலுகையைப் பெற முடியும். ரூ.10 கோடிக்கு மேல் இருந்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
பிரிவு 54ன் கீழ் வரிவிலக்கு பெற, பழைய சொத்து விற்பனை செய்யப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் புதிய வீட்டை வாங்க வேண்டும். வீடு கட்டும் பணியை எடுத்தால், மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும். குடியிருப்பு சொத்து விற்கப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு புதிய வீடு வாங்கப்பட்டாலும் வரிச் சலுகையைப் பெறலாம்.
வருமானம் வாடகையாகப் பெறப்பட்டால், அது வருமான வரிக் கணக்கில் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். இந்த வருமானத்தை 'பிற வருமானம்' என்ற தலைப்பின் கீழ் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, இது வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, அதில் ஸ்லாப் முறையின் கீழ் வரி செலுத்த வேண்டும்.
Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!
Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?
EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?