மேலும் அறிய

Investment For Childs: உங்க குழந்தையின் கல்வி தொடங்கி கல்யாணம் வரை - ரிஸ்க் இல்லாத 5 நிதி சேமிப்பு திட்டங்கள்

Investment For Childs: குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதியை சேமிக்க உதவும் சிறந்த திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Investment For Childs: குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதியை சேமிக்க உதவும், 5 திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான நிதி சேமிப்பு திட்டங்கள்:

அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும்,  எதிர்காலத்தில் குழந்தைகள் கல்வி அல்லது திருமணத்திற்காக நிதி அழுத்தத்தை எதிர்கொள்ள கூடாது விரும்புகிறார்கள். உங்கள் குழந்தையின் வளமான எதிர்காலத்திற்காக நீங்களும் இப்போதிலிருந்து பணத்தைச் சேமிக்க விரும்புகிறீர்கள் என்றால், அதற்கேற்ற சில முதலீட்டு திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்தின் கவலையிலிருந்து விடுபடலாம். .

சந்தையில் முதலீடு செய்ய பல திட்டங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான மக்கள் அரசாங்கத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், ஏனெனில் அவை முதலீட்டைப் பொறுத்தவரை பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. குழந்தைகளுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் உங்கள் பணத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது மட்டுமல்லாமல், நல்ல வருமானத்தையும் தருகின்றன.

குழந்தைகளுக்கான அரசின் நிதி சேமிப்பு திட்டங்கள்:

1. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 இல் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் மிகவும் பிரபலமான திட்டம் இது. இந்த திட்டம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கானது. அதன் உதவியால் உங்கள் மகளின் படிப்பு முதல் திருமணம் வரை அனைத்திற்கும் பணம் ஏற்பாடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெண் குழந்தையின் பெயரில் வெறும் 250 ரூபாயில் கணக்கைத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க மகளின் வயது 10 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு மகளின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. பொது வருங்கால வைப்பு நிதி (PPF):

உங்கள் குழந்தைகளின் பெயரில் PPF (பொது வருங்கால வைப்பு நிதி) கணக்கையும் நீங்கள் திறக்கலாம். இந்தத் திட்டத்தில், தாய் அல்லது தந்தை அல்லது பெற்றோர் இருவரும் சேர்ந்து தங்கள் குழந்தையின் பெயரில் முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீட்டிற்கு இது ஒரு நல்ல வழி, நீங்கள் ஆண்டுக்கு 500 ரூபாயில் முதலீடு செய்யலாம் மற்றும் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.50 லட்சம் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுத் திட்டத்தில் சிறந்த வருமானத்துடன், வரிச் சலுகைகளும் கிடைக்கும்.

3. பாலிகா சம்ரித்தி யோஜனா:

பாலிகா சம்ரித்தி யோஜனா திட்டம் 1993 இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் பெண் குழந்தைகளின் கல்விக்கு பிறப்பு முதல் நிதியுதவி வழங்குவதே அரசின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், தாய்க்கு மகள் இருந்தால், பிரசவத்திற்கு பின், 500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. பெண் கல்விக்கான செலவையும் அரசே ஏற்கிறது.

4. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC):

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஒரு நல்ல முதலீட்டுத் திட்டமாகும். தபால் நிலையத்திற்குச் சென்று அதன் கணக்கை எளிதாகத் திறக்கலாம். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் குறைந்தபட்ச முதலீட்டை ரூ.1,000 முதல் தொடங்கலாம் மற்றும் இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. உங்கள் பிள்ளை 10 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் அவருடைய பெயரில் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மை என்னவென்றால், வரிச் சலுகைகளுடன் நீங்கள் பாதுகாப்பான வருமானத்தையும் பெறுவீர்கள்.

5. கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி)

பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளின் பெயரில் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) திட்டத்தில் முதலீடு செய்யலாம். KVP ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம். இதில் முதலீடு செய்யப்படும் தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம், இதில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget