மேலும் அறிய

Infosys Share Buyback: ரூ.9300 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப்பெறுவதாக இன்ஃபோசிஸ் அறிவிப்பு!

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான கணக்குகளை வெளியிடுகையில் இன்ஃபோசிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெங்களூரை தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ்  நிறுவனம் தங்களது பொதுப் பங்குகளில் இருந்து 9,300 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான கணக்குகளை வெளியிடுகையில் இன்ஃபோசிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொருளாதார சூழல் எண்ண முடியாத அளவு நலிவுற்றுள்ளது. இந்தியாவில் குறிப்பாக விலைவாசி, பணவீக்கம் என நிலவும் இக்கட்டான பொருளாதார சூழலில் நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் 6.8 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

இத்தைகைய பொருளாதார சூழலில் பைஜூஸ் உள்ளிட்ட சில நிறுவங்கள் லாபத்தைத் தக்கவைக்கும் பொருட்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

இந்நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் பொதுப்பங்குகளில் இருந்து 9300 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப்பெறும் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டுள்ளது.

 

மேலும் பங்கு ஒன்றுக்கு 16.5 ரூபாய் இடைக்கால லாபத்தையும் அந்நிறுவனம் அறிவித்தது. மூலதன ஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்ப ஒரு பங்குக்கு ரூ.16.50 இடைக்கால லாபத்தை அறிவித்துள்ளதாக இன்ஃபோசிஸ் தலைமை செயல் அலுவனர் நிலஞ்சன் ராய் முன்னதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனம் தனது வணிகத்தை ரஷ்யாவில் நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உக்ரைன் மோதலின் பின்னணியில் இந்த முடிவைத் தங்கள் நிறுவனம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

ஆரக்கிள் கார்ப் மற்றும் எஸ்ஏபிஎஸ்இ உட்பட பல உலகளாவிய ஐடி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது அனைத்து செயல்பாடுகளையும் உக்ரைன் மீதான போர் காரணமாக இடைநிறுத்தியுள்ளன.

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சலீல் பரேக், "சூழலைப் பார்க்கும்போது எங்கள் வணிகம் மற்றும் எங்கள் பணிகள் அனைத்தையும் ரஷ்யாவிலிருந்து ரஷ்யாவிற்கு வெளியே மாற்றத் தொடங்கினோம்.

நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை அறிவித்த பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சலீல் பரேக், இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் 100க்கும் குறைவான ஊழியர்களையே கொண்டுள்ளது என்றார்.

 

 

"எங்களுக்கு ரஷ்யாவில் வாடிக்கையாளர்கள் இல்லை. ரஷ்யாவில் நாங்கள் செய்யும் பணி உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கானது, இந்தச் சூழலில்தான் ஒரு மாற்றத்தைத் தற்போது தொடங்கியுள்ளோம். இந்தக் கட்டத்தில் இன்ஃபோசிஸ் கண்ணோட்டத்தில் எங்கள் வணிகத்துக்கு இதனால் எந்தவிதத் தாக்கமும் இல்லை," என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்தப் பகுதியின் வளர்ச்சியில் நிறுவனம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்றார். "களத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் மிகவும் வருத்தம் கொண்டுள்ளோம்," என்று சலீல் பரேக் கூறினார்.

 

ரஷ்யாவில் உள்ள தங்களது ஊழியர்கள் மற்ற நாடுகளில் உள்ள பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் பணிபுரிய நிறுவனம் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Bigg Boss Tamil 8: ”நாளை தொடங்குது பிக்பாஸ்” விஜய் சேதுபதி வைக்கப்போகும் ட்விஸ்ட் என்ன தெரியுமா?
”நாளை தொடங்குது பிக்பாஸ்” விஜய் சேதுபதி வைக்கப்போகும் ட்விஸ்ட் என்ன தெரியுமா?
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
Bigg Boss Tamil 8: ”நாளை தொடங்குது பிக்பாஸ்” விஜய் சேதுபதி வைக்கப்போகும் ட்விஸ்ட் என்ன தெரியுமா?
”நாளை தொடங்குது பிக்பாஸ்” விஜய் சேதுபதி வைக்கப்போகும் ட்விஸ்ட் என்ன தெரியுமா?
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Breaking News LIVE 5th OCT 2024: திருப்பதியில் ₹13.45 கோடியில் கட்டப்பட்ட சமையல் கூடம் : திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி..எங்கு எப்போது பார்க்கலாம்.. ட்ராபிக் மாற்றங்கள் என்ன?
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
முதல் கையெழுத்து விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு தான்... துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்...
Embed widget