EPFO Interest Rate: தொழிலாளர்களின் பி.எஃப். வட்டி விகிதம் உயர்வு - அறிவிப்பு வெளியிட்ட இ.பி.எஃப்.ஓ!
EPFO Interest Rate: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சி.பி.டி. ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஓய்வூதிய நிதி அமைப்பான இ.பி.எஃப்.ஒ., 2023-2024 ஆண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25%-ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இருந்ததைவிட அதிகமாகும்.
பி.எஃப். வட்டி உயர்வு:
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2021- 2022 ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைத்திருந்தது. இந்த வட்டி விகிதம் 2020- 2021ம் ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இம்முறை 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் (Central Board of Trustees ) ஆலோசனை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகித உயர்த்தப்படுவதன் மூலம் 6 கோடி பணியாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.டி.யின் முடிவுக்குப் பின், 2023 - 24-ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். புதிய வட்டி விகிதம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் மூலமாக அரசின் அங்கீகாரம் பெற்ற பின்னரே இ.பி.எஃப்.ஓ. உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தை வழங்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets