மேலும் அறிய

Budget 2022: பட்ஜெட் கூட்டத்தொடரில் க்ரிப்டோகரன்சி மீதான விதிமுறைகள் என்னென்ன? - ஆலோசனை கூறும் பொருளாதார நிபுணர்கள்

இந்தியாவின் சந்தை அளவைக் கணக்கில் கொண்டு, க்ரிப்டோகரன்சி மீது கீழ்க்கண்ட விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகமான க்ரிப்டோகரன்சியாக `பிட்காயின்’ தோன்றியது. அதற்குப் பிறகு, பிட்காயின் கேஷ், ரிப்பிள், லைட்காயின் முதலான பல்வேறு க்ரிப்டோகரன்சிகள் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளன. தற்போதைய ஜனவரி 2022ஆம் ஆண்டில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான க்ரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் க்ரிப்டோகரன்சிக்கான சந்தை பெருமளவில் வளர்ந்துள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் க்ரிப்டோகரன்சியில் இந்தியர்களின் முதலீடு சுமார் 241 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் அதிகளவிலான க்ரிப்டோகரன்சி உரிமையாளர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன. 

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை நிர்வகிக்கவோ, கட்டுப்படுத்தவோ, தடைசெய்யவோ எந்தச் சட்டமும் இல்லை. எனவே இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை வாங்கவோ, வியாபாரம் செய்யவோ, க்ரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் மையம் நடத்தவோ சட்ட விதிமீறல் எதுவும் இல்லை. எனினும், அதன்மீதான முதலீடுகளில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க, மத்திய அரசு கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் க்ரிப்டோகரன்சியைத் தடை செய்யவோ, கட்டுப்படுத்தவோ கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்ட மசோதா வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Budget 2022: பட்ஜெட் கூட்டத்தொடரில் க்ரிப்டோகரன்சி மீதான விதிமுறைகள் என்னென்ன? - ஆலோசனை கூறும் பொருளாதார நிபுணர்கள்

இந்தியாவின் சந்தை அளவைக் கணக்கில் கொண்டு, க்ரிப்டோகரன்சியின் மீது முதலீடு செய்யப்படும் தொகையின் அளவு, அதனால் விளையும் ஆபத்துகளையும் க்ரிப்டோகரன்சி மீது கீழ்க்கண்ட விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 

1. முதலீட்டுக்கான சொத்தாகக் கருதுவது

முதலீடுகளுக்கான சொத்துகளாக க்ரிப்டோகரன்சி கருதப்பட வேண்டும். எனவே க்ரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் முதலீட்டால் பெறப்படும் நன்மைகளாகவே கருதப்பட வேண்டும். இதன்மூலம் க்ரிப்டோகரன்சியை விற்பது வருவாய் தரும் செயலாகப் பார்க்கப்பட்டு, வரி விதிக்கப்படும். பெரும்பாலான நாடுகளில் க்ரிப்டோகரன்சி என்பது சொத்துபோல கருதப்படுகிறது. 

2. வரி விதிக்கப்படும் பொருளாகக் கருதப்படுவது

அரசுக்கு வருவாய் வரவழைப்பதற்காக TDS, TCS ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வருவாய் தோன்றும் இடத்திலேயே வரி வருவாய் பெறுவதற்காக இந்தத் திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. க்ரிப்டோகரன்சியைப் பயன்படுத்துபவர்களின் பொருளாதார நகர்வுகளைக் கண்காணிக்க, க்ரிப்டோகரன்சியை வாங்குவதற்கும், விற்பதற்கும் வரி விதிக்கும் முறையை அறிமுகப்படுத்துவதோடு, சிறிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பதற்கும், பெறுவதற்கும் ஒரு எல்லைக்கான தொகையையும் நிர்ணயிக்க வேண்டும். 

Budget 2022: பட்ஜெட் கூட்டத்தொடரில் க்ரிப்டோகரன்சி மீதான விதிமுறைகள் என்னென்ன? - ஆலோசனை கூறும் பொருளாதார நிபுணர்கள்

3. நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் குறிப்பு

நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் குறிப்பிடப்படும் சொத்து குறித்த பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையிடம் காட்டப்பட வேண்டும். எனவே இதில் க்ரிப்டோகரன்சி மீதான பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க  நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் அதுகுறித்து குறிப்பிட வேண்டும். 

4. அதிக வரிவிதிப்பு

க்ரிப்டோகரன்சி மூலமாகப் பெறப்படும் லாபத்தின் மீது அரசு அதிகளவிலான வரியை விதிக்க வேண்டும். லாட்டரி, கேம் ஷோ முதலானவற்றில் வெற்றி பெறுபவை மீது விதிக்கப்படுவது போல 30 சதவிகித வரியை க்ரிப்டோகரன்சி மீதும் விதிக்கலாம். 

5. வெவ்வேறு வருவாய்களுக்கு எதிராக க்ரிப்டோகரன்சியின் இழப்பைச் சரிகட்ட கூடாது

க்ரிப்டோகரன்சி மீதான சந்தை ஏற்றம், இறக்கங்கள் நிரம்பியிருப்பதோடு, அதிக சிக்கல்கள் நிரம்பியது. எனவே இதில் ஏற்படும் நிதி இழப்புகளை சரிசெய்ய பிற வருவாய் வாய்ப்புகளை வைத்து சரிகட்டுவதை அரசு அனுமதிக்காமல், இழப்புகளை இழப்புகளாகவே விட்டுவிடுவதை ஊக்குவிக்க வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget