மேலும் அறிய

Digital Currency Blockchain: ‛க்ரிப்டோ கரென்சியை சமாளிக்க ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி’ - அறிவித்தார் நிர்மலா சீதாராமன்!

ரிசர்வ் வங்கியின் மூலமாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

கிரிப்டோகரன்சியை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் சார்பில் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் ருபி அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பில், ரிசர்வ் வங்கி சார்பில் கிரிப்டோகரன்சி வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் ரூபாய் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் கரன்சி மூலம் இணையபரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார்.


Digital Currency Blockchain: ‛க்ரிப்டோ கரென்சியை சமாளிக்க ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி’  - அறிவித்தார் நிர்மலா சீதாராமன்!

கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி, பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு முதலீட்டாளர்களும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் காட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற கருத்துக்கள் பரவியது.

இந்த சூழலில்தான் இந்தியாவில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக ஏதும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவராமலே இருந்தது. இந்த சூழலில், நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது முக்கிய அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில்தான் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


Digital Currency Blockchain: ‛க்ரிப்டோ கரென்சியை சமாளிக்க ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி’  - அறிவித்தார் நிர்மலா சீதாராமன்!

இந்த டிஜிட்டல் ருபி எனப்படும் டிஜிட்டல் கரன்சியானது பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்பட இருப்பதால், இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை இதில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

கிரிப்டோன்சிக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டிருப்பதால், டிஜிட்டல் கரன்சிக்கும் கணிசமாக வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதால் இதன் மீது அனைவரும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துவதால் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Budget 2022: ‛தபால் வங்கி கணக்கு இருந்தால்... வங்கி பண பரிமாற்றம் செய்யலாம்...’ -பட்ஜெட்டில் அறிவிப்பு!

மேலும் படிக்க : Budget 2022 Memes: வரிச்சலுகை ஏமாற்றம்... வரிவரியாய் வரிசை கட்டும் மீம்ஸ்கள்!

மேலும் படிக்க : Union Budget 2022: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Breaking News LIVE: ஓவர்நைட்டில், இஸ்லாமியர்களை ஓபிசிக்களாக மாற்றிவிட்டார்கள் - மோடி பேச்சு
Breaking News LIVE: ஓவர்நைட்டில், இஸ்லாமியர்களை ஓபிசிக்களாக மாற்றிவிட்டார்கள் - மோடி பேச்சு
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்துDhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
Breaking News LIVE: ஓவர்நைட்டில், இஸ்லாமியர்களை ஓபிசிக்களாக மாற்றிவிட்டார்கள் - மோடி பேச்சு
Breaking News LIVE: ஓவர்நைட்டில், இஸ்லாமியர்களை ஓபிசிக்களாக மாற்றிவிட்டார்கள் - மோடி பேச்சு
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித்தீர்க்கப்போகும் மழை ..
Sabarimala Aravana Payasam : பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
பக்தர்கள் மனசு புண்படக்கூடாது : ரூ.6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு
Crime: வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்
Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்
Embed widget