மேலும் அறிய

திருப்பதி உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஜூன் 13ஆம் தேதி தான் 2 கோடி ரூபாய்க்கு காணிக்கை கிடைத்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் வருமானம் 2 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 55 நாட்களுக்கு பிறகு இந்த வருமானம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியிலும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதன் காரணமாக உண்டியல் வருமானமும் குறைந்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், கொரோனா அதிகரிப்பால் இலவச தரிசன முறையை ரத்து செய்துள்ளது. சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தற்போது சாமியை தரிசனம் செய்கின்றனர். இதன் காரணமாக கோயில் உண்டியல் வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு உண்டியல் வருமானம் 2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 


திருப்பதி  உண்டியல் காணிக்கை: நீண்ட இடைவெளிக்கு பின் ரூ.2 கோடியை தாண்டியது!

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 12ஆம் தேதி 15,314 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்ததன் மூலம் ரூ. 2 கோடியே 6 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 14ஆம் தேதி 13,918 பேர் சாமி தரிசனம் செய்தபோது, உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 15 லட்சமாக இருந்தது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ரூ.2 கோடியே 29 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்திருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி உண்டியல் வருமானம் 2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது” என்று கூறினார்கள்.

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல்!

கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சிறிது நாட்களுக்கு பிறகு கூட்டம் சிறிது அதிகரித்து, உண்டியல் வசூலும் கூடியது. கொரோனா இரண்டாவது அலை தாக்கதால் மீண்டும் உண்டியல் வருமானம் குறைந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.

300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதால், பக்தர்கள் சாமியை விரைவில் தரிசனம் செய்கின்றனர். கடந்த மாதத்தில் 30 நிமிடத்தில் சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கியூவில் நுழைந்தது முதல் எந்த தொந்தரவும், கூட்ட நெரிசலும் இல்லாமல் பக்தர்கள் நிம்மதியாக சாமியை தரிசித்து வருகின்றனர்.

முன்னதாக, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என்றும், பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தினத்தை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget