மேலும் அறிய

ஆடிப்பெருக்கு விழா: திருவாரூர் கமலாலயக் கரையில் பெண்கள் வழிபாடு..!

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் கரையில்  புதுமண தம்பதிகளும், பெண்கள், சிறுவர்கள் என பலர் திரண்டு வந்து குளக்கரையில் பூஜை நடத்தி வழிபட்டனர். 

திருவாரூர் கமலாலயக் கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் உற்சாகமாக வழிபாடு நடத்தினர். 

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு நாளன்று பெண்கள் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள ஆறு குளம் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் பழம், பூ, மஞ்சள், அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு நடத்தி தீபாரதனை காண்பித்து பழம் அரிசி போன்றவற்றை நீர் நிலைகளுக்கு படைத்து அதனை தண்ணீரில் விடுவது வழக்கம். அதேபோன்று விவசாயிகளும் ஆடி பட்டம் தேடி விதைக்கணும் என்கிற முதுமொழிக்கு ஏற்றவாறு ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு வழிபாடு நடத்தி சம்பா சாகுபடிக்கான விதைத்தெளிப்பில் ஈடுபடுவதும் வழக்கம். இந்த வருடம் மேட்டூர் அணையில் முன்கூட்டியே மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதால் தற்போது பெரும்பாலான விவசாயிகள் குருவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழர்களிடையே இயற்கை வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குறிப்பாக பஞ்சபூதங்களான ஆகாயம் நிலம் நீர் காற்று நெருப்பு என அனைத்தையும் வழிபடும் பழக்கம் என்பது தமிழர்களிடையே நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் காவிரி தாய்க்கும் நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த ஆடிப்பெருக்கு என்பது கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆடிப்பெருக்கு விழா: திருவாரூர் கமலாலயக் கரையில் பெண்கள் வழிபாடு..!

மேலும், ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாட்டு நாளாகும். தமிழகம் முழுவதும் இன்று ஆடி பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்வர். விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் கரையில் புதுமண தம்பதிகளும், பெண்கள், சிறுவர்கள் என பலர் திரண்டு வந்து குளக்கரையில் பூஜை நடத்தி வழிபட்டனர். 


ஆடிப்பெருக்கு விழா: திருவாரூர் கமலாலயக் கரையில் பெண்கள் வழிபாடு..!

குறிப்பாக சுமங்கலி பெண்கள் அரிசி, பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி தீபாரதனை காண்பித்து பின்பு பழம் அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர். காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அந்த நீரால் தானியங்கள் விளைந்து பொதுமக்களுக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும் நீர்நிலைகளுக்கும் நீருக்கும் நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்கள் தங்களுக்குள் மஞ்சள் கயிறுகளை மாறி மாறி கட்டி கொண்டனர். வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கும் மஞ்சள் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (09-09-2026): மேஷத்துக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நாள் நல்லா இருக்கா?
Rasi Palan Today (09-09-2026): மேஷத்துக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நாள் நல்லா இருக்கா?
Rasi Palan Today (07-09-2026): கும்பம் கவனமா இருங்க.. மத்த ராசிக்கு இன்று நாள் எப்படி?.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (07-09-2026): கும்பம் கவனமா இருங்க.. மத்த ராசிக்கு இன்று நாள் எப்படி?.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (03-09-2026): தனுசுக்கு பொறுமை.. கும்பத்துக்கு கவனம்.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (03-09-2026): தனுசுக்கு பொறுமை.. கும்பத்துக்கு கவனம்.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (02-09-2026): இன்னைக்கு நல்லது நடக்குமா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (02-09-2026): இன்னைக்கு நல்லது நடக்குமா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mojtaba Khamenei: மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Embed widget