மேலும் அறிய

ஆடிப்பெருக்கு விழா: திருவாரூர் கமலாலயக் கரையில் பெண்கள் வழிபாடு..!

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் கரையில்  புதுமண தம்பதிகளும், பெண்கள், சிறுவர்கள் என பலர் திரண்டு வந்து குளக்கரையில் பூஜை நடத்தி வழிபட்டனர். 

திருவாரூர் கமலாலயக் கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் உற்சாகமாக வழிபாடு நடத்தினர். 

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு நாளன்று பெண்கள் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள ஆறு குளம் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் பழம், பூ, மஞ்சள், அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு நடத்தி தீபாரதனை காண்பித்து பழம் அரிசி போன்றவற்றை நீர் நிலைகளுக்கு படைத்து அதனை தண்ணீரில் விடுவது வழக்கம். அதேபோன்று விவசாயிகளும் ஆடி பட்டம் தேடி விதைக்கணும் என்கிற முதுமொழிக்கு ஏற்றவாறு ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு வழிபாடு நடத்தி சம்பா சாகுபடிக்கான விதைத்தெளிப்பில் ஈடுபடுவதும் வழக்கம். இந்த வருடம் மேட்டூர் அணையில் முன்கூட்டியே மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதால் தற்போது பெரும்பாலான விவசாயிகள் குருவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழர்களிடையே இயற்கை வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குறிப்பாக பஞ்சபூதங்களான ஆகாயம் நிலம் நீர் காற்று நெருப்பு என அனைத்தையும் வழிபடும் பழக்கம் என்பது தமிழர்களிடையே நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் காவிரி தாய்க்கும் நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த ஆடிப்பெருக்கு என்பது கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆடிப்பெருக்கு விழா: திருவாரூர் கமலாலயக் கரையில் பெண்கள் வழிபாடு..!

மேலும், ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாட்டு நாளாகும். தமிழகம் முழுவதும் இன்று ஆடி பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்வர். விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் கரையில் புதுமண தம்பதிகளும், பெண்கள், சிறுவர்கள் என பலர் திரண்டு வந்து குளக்கரையில் பூஜை நடத்தி வழிபட்டனர். 


ஆடிப்பெருக்கு விழா: திருவாரூர் கமலாலயக் கரையில் பெண்கள் வழிபாடு..!

குறிப்பாக சுமங்கலி பெண்கள் அரிசி, பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி தீபாரதனை காண்பித்து பின்பு பழம் அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர். காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அந்த நீரால் தானியங்கள் விளைந்து பொதுமக்களுக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும் நீர்நிலைகளுக்கும் நீருக்கும் நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்கள் தங்களுக்குள் மஞ்சள் கயிறுகளை மாறி மாறி கட்டி கொண்டனர். வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கும் மஞ்சள் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (14-07-2026): ஆனி மாத அமாவாசை.. எந்த ராசியினருக்கு சிறந்த நாள்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (14-07-2026): ஆனி மாத அமாவாசை.. எந்த ராசியினருக்கு சிறந்த நாள்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (11-07-2026): ரிஷபத்துக்கு லாபம்.. துலாமுக்கு வரவு.. உங்கள் ராசிக்கான பலன்களை தெரிஞ்சுகோங்க!
Rasi Palan Today (11-07-2026): ரிஷபத்துக்கு லாபம்.. துலாமுக்கு வரவு.. உங்கள் ராசிக்கான பலன்களை தெரிஞ்சுகோங்க!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Embed widget