மேலும் அறிய

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - கரும்புத் தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளன்று கரும்புத் தொட்டில் கட்டி மாடவீதி வலம் வந்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவும், பௌர்ணமி கிரிவலமும் மகா தீபம் உலக பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளிமாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் என சுமார் 25 லட்சத்திற்கும்  மேற்பட்ட நபர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். 14 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவில் தோராயமாக 20 முதல் 30 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் பிரம்மாண்டமான தீபத் திருவிழா கோலாகலமில்லாமல் ஆகமவிதிகளின்படி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வருகின்றது. கோவில் வளாகத்திலேயே திருவிழா நடந்தாலும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு தங்கள் நேர்த்தி கடனைச் செய்ய வேண்டு, என கரும்பு தொட்டிலோடு மாடவீதியை வலம் வருகிறார்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - கரும்புத் தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஹோய்சாள வம்சத்தினர் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவின் ஒரு பகுதியை இணைத்து சில நூற்றாண்டுகள் ஆட்சி செய்து வந்தனர். இவர்களின் தலைநகரம் ஹௌபேடாக இருந்த நிலையில் இரண்டாவது தலைநகரமாக திருவண்ணாமலை இருந்தது. சோழர்களோடு திருமண உறவு வைத்து கொண்டிருந்த ஹோய்சாள வம்சத்தினர். கி.பி. 1291 முதல் 1343 வரை ஆட்சி செய்தவர் வீர வல்லாள மகாராஜா. அவருக்கு வாரிசு இல்லை என்பதால் தனக்கொரு வாரிசு வேண்டும் என அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்தார். அதன்படி அவருக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கிறது. அண்ணாமலையாரே தனக்கு மகனாகப் பிறந்தார் பின் வளர்ந்தார் என்கிறது தலபுராணம். இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலின் தலபுராணத்தை படிக்கும், கேட்கும் பக்தர்கள், குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வேண்டும் என அண்ணாமலையாரை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - கரும்புத் தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அப்படி பிரார்த்தனை செய்து குழந்தை பிறந்தவுடன் அண்ணாமலையாருக்கு நேர்த்திகடன் செலுத்தும் விதமாக, கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 ஆம் நாள் அன்று, பன்னீர் கரும்பு வாங்கிவந்து அதில் புடவையை கொண்டு தொட்டில் கட்டி தங்களது குழந்தையை அதில் உட்கார வைத்து அண்ணாமலையார் கோயில் அமைந்த மாடவீதியை வலம் வந்து தங்களது நேர்த்தி கடனைச் செலுத்துகின்றனர். பன்னீர் கரும்பை பக்தர்கள் பயன்படுத்த காரணம், அது இனிப்பானது என்பதால் கடவுளுக்கு இனிப்பாக நன்றியை செலுத்த வேண்டுமென பக்தர்கள் கரும்பை தேர்வு செய்து காலம் காலமாக அதன்படி கரும்பில் தொட்டில் கட்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாடவீதியை சுற்றி வருகின்றனர். அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டபடி கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மாடவீதியில் வலம் வருவது பக்தி பக்தி பரவசத்துடன் சுற்றி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kumbha Rasi: சனிப்பெயர்ச்சி... கும்பத்துக்கு ஜாலியா? இல்ல காலியா? இதுதான் நடக்கும்!
Kumbha Rasi: சனிப்பெயர்ச்சி... கும்பத்துக்கு ஜாலியா? இல்ல காலியா? இதுதான் நடக்கும்!
Dhanusu Rasi Sani Peyarchi Palan: தனுசு ராசிக்காரர்களே.. சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமா? பாதகமா?
Dhanusu Rasi Sani Peyarchi Palan: தனுசு ராசிக்காரர்களே.. சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமா? பாதகமா?
Viruchigam Rasi Sani Peyarchi Palan: சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசியின் காதல் வாழ்க்கையை பாதிக்குமா? இதோ பரிகாரங்கள்
Viruchigam Rasi Sani Peyarchi Palan: சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசியின் காதல் வாழ்க்கையை பாதிக்குமா? இதோ பரிகாரங்கள்
Thulam Rasi Sani Peyarchi Palan: துலாமிற்கு சனிப்பெயர்ச்சி சாதகமா? பாதகமா? இதோ ஓர் அலசல்
Thulam Rasi Sani Peyarchi Palan: துலாமிற்கு சனிப்பெயர்ச்சி சாதகமா? பாதகமா? இதோ ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget