மேலும் அறிய

ஐப்பசி அன்னாபிஷேகம் : விழுப்புரத்தில் 50 கிலோ அன்னமும், காய்கறி பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்...

விழுப்புரம்: 50 கிலோ அன்னதாலும், காய்கறி பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்

ஐப்பசி  அன்னாபிஷேகம் 

விழுப்புரம் ( Villupuram ) :

ஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்கள்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும். லிங்கத் திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். "தான் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். அதனால் பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை, சிவபெருமானின் கையை கவ்விக்கொண்டது. ஈசனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையை கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும் போதுதான், சிவபெருமானின் கையைவிட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்குச் சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தியபோது, அவருக்கு அன்னபூரணி அன்னமிட்டதாக" நம்பப்படுகிறது
 

ஐப்பசி அன்னாபிஷேகம் : விழுப்புரத்தில் 50 கிலோ அன்னமும், காய்கறி பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்...
 
ஆதிவாலீஸ்வரர் சிவன்

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ( Villupuram) ஆதிவாலீஸ்வரர் சிவன் கோயிலில் மூலவர்க்கு 50 கிலோ அன்னத்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை  காண்பிக்கப்பட்டது. ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் வரும் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பானது.

இறைவன் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம். பஞ்சபூதம் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்கள் சேர்ந்ததால் ஆகிறது. பஞ்சபூதங்களால் ஆன இந்த அன்னம் மனிதனுக்கு இன்றியமையாத உணவாக விளங்குகிறது. சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய தினம் நாம் அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பருக்கை அன்னத்திலும் சிவ பெருமான் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம் ஆகும். 


ஐப்பசி அன்னாபிஷேகம் : விழுப்புரத்தில் 50 கிலோ அன்னமும், காய்கறி பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்...

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களிலும் இன்று அன்னாபிஷேகம்  நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர்  திருக்கோவிலில், மொத்தமாக 75 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டும், 200 கிலோ அன்னத்தையும்  பயன்படுத்தி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக மூலவருக்கு 50 கிலோ அன்னத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சிறப்பு தீபாரதனை  காண்பிக்கப்பட்டது.

குழந்தை பாக்கியம்

மேலும், பக்தர்கள் இந்த அன்னாபிஷேகத்தை கண்டால் மிகவும் சிறப்பானது எனவும்  இந்த அன்னத்தை வாங்கி உன்னால் நோய்நொடி நீங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்ற ஐதீகம் இருப்பதால் , இந்த அன்னாபிஷேக வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


ஐப்பசி அன்னாபிஷேகம் : விழுப்புரத்தில் 50 கிலோ அன்னமும், காய்கறி பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்...

அன்னாபிஷேகம் : அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையிலும் சிவனார் குடிபுகுந்ததாக நம்பிக்கை

அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவன் கோயில்களிலும் செய்வது வழக்கமான ஒன்று. முதலில் எப்போதும் செய்யும் வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்துவிட்டு புதிதாக அறுவடை செய்த நெல்மணிகளை உரலிலிட்டு குத்தி அரிசியாக்கி வரும் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் மூடி பலவகையான காய்கறிகளால் அலங்கரித்து, பூஜித்து பின்னர் அனைவருக்கும் அந்த அன்னத்தை பிரசாதமாக வழங்குவார்கள்

மேலும் மிகுதி அன்னத்தை நீர் நிலைகளில் சேர்ப்பித்து மீன் போன்ற ஜீவராசிகளுக்கும் அளித்து விடுவார்கள். இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அந்த பிரசாதத்தை பெரும் தம்பதியர் இணைபிரியாமல் வாழ்வாங்கு வாழ்வார்கள் என தெய்வத்தின் குரலில் மஹாசுவாமிகள் கூறுகிறார். அதனால் அன்று மாலை ஒவ்வொரு சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையிலும் சிவனார் குடிபுகுந்துள்ளதால் இதனை தரிசிக்கும் பக்தர்கள் கோடிலிங்க தரிசன பலனை அடைகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
9 மாதம்.. 3 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை சீரமைப்பு...தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.!
9 மாதம்.. 3 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை சீரமைப்பு...தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.!
ஆடும் மேய்க்கும் தொழிலாளி மகள்.. கேட் தேர்வில் சாதனை.. ஐஐடியில் கிடைத்த இடம்..!
ஆடும் மேய்க்கும் தொழிலாளி மகள்.. கேட் தேர்வில் சாதனை.. ஐஐடியில் கிடைத்த இடம்..!
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: சேலத்தில் இன்று திருச்சி, திருப்பூர் அணிகள் மோதல்! திண்டுக்கல் அபார வெற்றி!
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: சேலத்தில் இன்று திருச்சி, திருப்பூர் அணிகள் மோதல்! திண்டுக்கல் அபார வெற்றி!
Embed widget