மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
நாகை மாவட்டத்தில் முதன்முறையாக வாட்டர் ஆப்பிள் சாகுபடி- சாதித்து காட்டிய பட்டதாரி இளைஞர்
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது நர்சரியிலிருந்து கன்றுகள் வாங்கி வந்து தனது வீட்டு தோட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்துள்ளார்.
![நாகை மாவட்டத்தில் முதன்முறையாக வாட்டர் ஆப்பிள் சாகுபடி- சாதித்து காட்டிய பட்டதாரி இளைஞர் young graduate who has achieved water apple cultivation for the first time in Nagai district TNN நாகை மாவட்டத்தில் முதன்முறையாக வாட்டர் ஆப்பிள் சாகுபடி- சாதித்து காட்டிய பட்டதாரி இளைஞர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/20/324accc621808ebf89d84a6f902d0ba51681975267573113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வாட்டர் ஆப்பிள்
நாகை அருகே குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட வாட்டர் ஆப்பிள் செடியை நாகை மாவட்டத்தில் முதன்முறையாக சோதனை முறையில் சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் அளவில் வளரக்கூடிய ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது 'வாட்டர் ஆப்பிள்'. ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் மரத்தின் தாயகம் இந்தியாவாகும். இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் சந்திரபோஸ் என்பவர் குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய வாட்டர் ஆப்பிள் செடியை சோதனை முறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது நர்சரியிலிருந்து கன்றுகள் வாங்கி வந்து தனது வீட்டு தோட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்துள்ளார்.
![நாகை மாவட்டத்தில் முதன்முறையாக வாட்டர் ஆப்பிள் சாகுபடி- சாதித்து காட்டிய பட்டதாரி இளைஞர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/20/0c1b3c8a5b1b8d38a91e066dde7aa7f81681975315276113_original.jpg)
தற்பொழுது கொத்து கொத்தாக காய்க்கத் துவங்கி உள்ளது. ஆண்டுக்கு மூன்று முறை காய்க்கும் வாட்டர் ஆப்பில் ஒரு செடியில் வாரத்திற்கு 100 கிலோ விற்கும் மேலாக அறுவடை செய்து வருவதாகவும் அருகிலுள்ள பரவை சந்தையில் கொண்டு விற்பனை செய்யப்படும் வாட்டர் ஆப்பில் இங்கிருந்து திருச்சி, திருவாரூர், மன்னார்குடி, காரைக்கால் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வதாகவும் கிலோ 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விலை போவதால் நல்ல வருவாய் கிடைப்பதாகவும் மேலும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய செடிகளை மானிய விலையில் வழங்கினால் மேலும் இப்பகுதியில் மாற்று சாகுபடியில் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்கிறார் பட்டதாரி விவசாயி சந்திரபோஸ்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Khelo khul ke, sab bhool ke - only on Games Live
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
பொழுதுபோக்கு
நெல்லை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion