மேலும் அறிய

SAMPADA | உணவுப் பதப்படுத்தும் துறையை மேம்படுத்தும் மத்திய அரசுத் திட்டம்.. SAMPADA என்றால் என்ன?

பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் விவரங்கள், அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் முதலானவை குறித்த தகவல்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம்... 

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி சார்பில், `சம்படா’ (SAMPADA - Scheme for Agro-Marine Processing and Development of Agro-Processing Clusters) என்ற திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாயம் முதல் சில்லறை வர்த்தகம் வரையிலான விநியோகத்தை மேம்படுத்தும் விதமான நவீன கட்டமைப்பை உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்தத் திட்டம், `பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் கூறியுள்ளது. சமீபத்தில், இந்தத் திட்டத்தில் மீண்டும் சுமார் 4600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு மார்ச் வரை அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.. 

பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் விவரங்கள், அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் முதலானவை குறித்த தகவல்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம்... 

பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா.. என்ன சிறப்பு?

SAMPADA | உணவுப் பதப்படுத்தும் துறையை மேம்படுத்தும் மத்திய அரசுத் திட்டம்.. SAMPADA என்றால் என்ன?

நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிப்பது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதற்காகவும் பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் கூறப்பட்டதன்படி, இந்தத் திட்டம் மூலம் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் எனவும், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் இதனால் உருவாகும் எனவும், விவசாயப் பொருள்களில் வரும் கழிவுகள் குறையும் எனவும், பதப்படுத்தும் உணவுகள் தயாரிப்பு, ஏற்றுமதி ஆகியவை பெருகும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அம்சங்கள்... 

மெகா உணவு நிலையங்கள்: இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதோடு, பால், மீன் முதலான பொருள்களையும் விவசாயப் பொருள்களோடு பதப்படுத்தி, சிறு, குறு நிறுவனங்களுக்கும், உற்பத்தியாளர்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள், சில்லறை வர்த்தகர்கள் அனைவரும் இணைந்து விநியோகத்தை உறுதி செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைக்கப்பட்ட பதப்படுத்தும் செயின் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கட்டமைப்பு: இதன் முக்கிய நோக்கம் என்பதே தோட்டக்கலை பொருள்கள் அறுவடை செய்த பிறகு ஏற்படுத்தும் இழப்பைத் தடுக்க ஒருங்கிணைக்கப்பட்ட பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்கி, மதிப்பு கூட்டப்பட்ட கட்டமைப்பின் மூலமாக விவசாயிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களிடம் பொருளைக் கொண்டு சேர்ப்பது வரை தடையின்றி விநியோகம் மேற்கொள்ளப்படும். 

உணவு பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்குவது, பெருக்குவது: இந்தத் திட்டத்தின் மூலம் உணவுப் பதப்படுத்துதலை அதிகரிப்பது, அதன் மதிப்பைப் பெருக்குவது, கழிவுகளைக் குறைப்பது முதலானவற்றை மேற்கொள்ள உணவு பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்குவது, பெருக்குவது, விரிவுபடுத்துவது முதலானவை மேற்கொள்ளப்படும். 

SAMPADA | உணவுப் பதப்படுத்தும் துறையை மேம்படுத்தும் மத்திய அரசுத் திட்டம்.. SAMPADA என்றால் என்ன?

விவசாயப் பொருள்களைப் பதப்படுத்தும் நிலையங்களுக்கான கட்டமைப்பு: விவசாயப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு அருகிலேயே உணவுப் பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று. 

முன்பக்க/ பின்பக்க இணைப்புகளை உருவாக்குவது: இந்தத் திட்டம் மூலமாக விவசாயம் மற்றும் தோட்டக்கலை பொருள்களை விவசாயிகளிடம் இருந்து பெறுவது முதல் முழு விநியோகமும் இந்த இணைப்புகளாகக் கருதப்பட்டு மேம்படுத்தப்படும். 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்யும் கட்டமைப்பு: இந்தத் திட்டத்தின் மூலமாக பதப்படுத்தப்படும் உணவுப் பொருளின் தரம் சர்வதேச விதிமுறைகளின்படி பரிசோதனை செய்யும் நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்படும். 

மனித வளம் மற்றும் நிறுவனங்கள்: இந்தத் திட்டத்தின் மூலம் ஆராய்ச்சித்துறையில் பெறப்படும் ஆய்வுகள் மூலமாக உணவுப் பதப்படுத்தும் துறையில் தேவையான முன்னேற்றங்கள் ஏற்படுத்த கட்டமைப்பு உருவாக்கப்படும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்.. சமூக ஆர்வலர்கள் வரவேற்பு !
மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்.. சமூக ஆர்வலர்கள் வரவேற்பு !
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
காசும் கிடைக்கும்... கடனுக்கான மானியமும் கிடைக்கும்! புதுச்சேரி அரசின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா?
காசும் கிடைக்கும்... கடனுக்கான மானியமும் கிடைக்கும்! புதுச்சேரி அரசின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget