மேலும் அறிய

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் என்னென்ன..? - தமிழக அரசுக்கு கோரிக்கை

இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிராம வளர்ச்சி குழு இந்த பட்ஜெட்டில் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம் குறிப்பாக மாவட்டத்தில் 90 சதவீதம் நெல் பயிர் சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் மூலமாக விவசாயிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர். தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆகவே மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது ஆகவே தமிழகத்தில் வறட்சியாக இருக்கக்கூடிய பகுதிகளில் சிறுதானிய உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் உள்ளது மத்திய அரசு செரிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது அதனை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு பதிலாக எல்லா வகையான சத்துக்கள் உடைய காய்கறிகள் சிறுதானியங்கள் என தமிழகத்தில் நிறைய இருக்கிறது அதனை அங்காடி மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இடுபொருள்களின் விலை மிக உயர்வாக உயர்ந்து கொண்டிருக்கிறது ஆகவே நெல் குவிண்டாலுக்கு 2500 வழங்க வேண்டும் கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் என்னென்ன..? - தமிழக அரசுக்கு கோரிக்கை
 
இயற்கை இடர்பாடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக காப்பீடு வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு உரிய முறையில் காப்பீடு கிடைக்க பெறுவதில்லை ஆகவே தமிழ்நாடு அரசு நெல் பயிருக்கு மட்டும் காப்பிட்டு திட்டத்தை தனியாக அறிவிக்க வேண்டும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் முன்கூட்டியே அணை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது ஆகவே மே மாத இறுதிக்குள் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணியை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம வேளாண்மை வளர்ச்சி குழு என்கிற குழு அமைக்க வேண்டும் விவசாயிகள் வருவாய்த்துறை வேளாண் துறை பொதுப்பணித்துறை அலுவலர்களை நியமித்து குழு மூலமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு இடுபொருள்கள் எந்திரங்கள் ஆகியவற்றை அந்த குழு பரிந்துரை செய்வதன் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகவே கிராம வளர்ச்சி குழு இந்த பட்ஜெட்டில் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும்.
 
பருத்தி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்த கட்டமாக குறுவை சாகுபடியில் ஈடுபட உள்ள விவசாயிகளுக்கு உரம் இடுபொருள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிறுகுறு விவசாயிகளுக்கு மண்வெட்டி பாறை தார்பாய் உள்ளிட்ட பொருள்களை மானிய விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இந்த அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம்  என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
Embed widget