மேலும் அறிய

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் என்னென்ன..? - தமிழக அரசுக்கு கோரிக்கை

இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிராம வளர்ச்சி குழு இந்த பட்ஜெட்டில் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம் குறிப்பாக மாவட்டத்தில் 90 சதவீதம் நெல் பயிர் சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் மூலமாக விவசாயிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர். தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆகவே மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது ஆகவே தமிழகத்தில் வறட்சியாக இருக்கக்கூடிய பகுதிகளில் சிறுதானிய உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் உள்ளது மத்திய அரசு செரிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது அதனை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு பதிலாக எல்லா வகையான சத்துக்கள் உடைய காய்கறிகள் சிறுதானியங்கள் என தமிழகத்தில் நிறைய இருக்கிறது அதனை அங்காடி மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இடுபொருள்களின் விலை மிக உயர்வாக உயர்ந்து கொண்டிருக்கிறது ஆகவே நெல் குவிண்டாலுக்கு 2500 வழங்க வேண்டும் கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் என்னென்ன..? - தமிழக அரசுக்கு கோரிக்கை
 
இயற்கை இடர்பாடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக காப்பீடு வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு உரிய முறையில் காப்பீடு கிடைக்க பெறுவதில்லை ஆகவே தமிழ்நாடு அரசு நெல் பயிருக்கு மட்டும் காப்பிட்டு திட்டத்தை தனியாக அறிவிக்க வேண்டும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் முன்கூட்டியே அணை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது ஆகவே மே மாத இறுதிக்குள் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணியை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம வேளாண்மை வளர்ச்சி குழு என்கிற குழு அமைக்க வேண்டும் விவசாயிகள் வருவாய்த்துறை வேளாண் துறை பொதுப்பணித்துறை அலுவலர்களை நியமித்து குழு மூலமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு இடுபொருள்கள் எந்திரங்கள் ஆகியவற்றை அந்த குழு பரிந்துரை செய்வதன் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகவே கிராம வளர்ச்சி குழு இந்த பட்ஜெட்டில் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும்.
 
பருத்தி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்த கட்டமாக குறுவை சாகுபடியில் ஈடுபட உள்ள விவசாயிகளுக்கு உரம் இடுபொருள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிறுகுறு விவசாயிகளுக்கு மண்வெட்டி பாறை தார்பாய் உள்ளிட்ட பொருள்களை மானிய விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இந்த அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget