மேலும் அறிய

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் என்னென்ன..? - தமிழக அரசுக்கு கோரிக்கை

இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிராம வளர்ச்சி குழு இந்த பட்ஜெட்டில் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம் குறிப்பாக மாவட்டத்தில் 90 சதவீதம் நெல் பயிர் சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் மூலமாக விவசாயிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர். தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆகவே மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது ஆகவே தமிழகத்தில் வறட்சியாக இருக்கக்கூடிய பகுதிகளில் சிறுதானிய உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் உள்ளது மத்திய அரசு செரிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது அதனை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு பதிலாக எல்லா வகையான சத்துக்கள் உடைய காய்கறிகள் சிறுதானியங்கள் என தமிழகத்தில் நிறைய இருக்கிறது அதனை அங்காடி மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இடுபொருள்களின் விலை மிக உயர்வாக உயர்ந்து கொண்டிருக்கிறது ஆகவே நெல் குவிண்டாலுக்கு 2500 வழங்க வேண்டும் கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் என்னென்ன..? - தமிழக அரசுக்கு கோரிக்கை
 
இயற்கை இடர்பாடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக காப்பீடு வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு உரிய முறையில் காப்பீடு கிடைக்க பெறுவதில்லை ஆகவே தமிழ்நாடு அரசு நெல் பயிருக்கு மட்டும் காப்பிட்டு திட்டத்தை தனியாக அறிவிக்க வேண்டும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் முன்கூட்டியே அணை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது ஆகவே மே மாத இறுதிக்குள் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணியை முழுமையாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம வேளாண்மை வளர்ச்சி குழு என்கிற குழு அமைக்க வேண்டும் விவசாயிகள் வருவாய்த்துறை வேளாண் துறை பொதுப்பணித்துறை அலுவலர்களை நியமித்து குழு மூலமாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு இடுபொருள்கள் எந்திரங்கள் ஆகியவற்றை அந்த குழு பரிந்துரை செய்வதன் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகவே கிராம வளர்ச்சி குழு இந்த பட்ஜெட்டில் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும்.
 
பருத்தி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்த கட்டமாக குறுவை சாகுபடியில் ஈடுபட உள்ள விவசாயிகளுக்கு உரம் இடுபொருள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிறுகுறு விவசாயிகளுக்கு மண்வெட்டி பாறை தார்பாய் உள்ளிட்ட பொருள்களை மானிய விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இந்த அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான் என்ன? கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான்! கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Tiago Vs Grand i10 Nios: டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Embed widget