மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை-இந்த ஆண்டு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை. எனவே இந்த ஆண்டு மஞ்சள் குலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மண்பானை, வண்ண கோலப்பொடிகள் இவைகள் மட்டுமின்றி முக்கிய பொருளாக மஞ்சள் குலைகளும் உள்ளது. தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளன்று அதிகாலையில் எழுந்து இல்லங்கள் முன்பு பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது தமிழ் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு தைத்திருநாளன்று பொங்கலிட்டு வழிபடும்போது, குத்துவிளக்கேற்றி வைத்து, பொங்கலிடப்பட்ட பானைகள் அருகில் மஞ்சள் தாங்கிய குலைகளை தோரணமாக கட்டி  வைப்பது வழக்கம்.   மஞ்சள் குலைகளை வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டில்  மங்கலம் உண்டாகும் என பெரியோர்கள் கூறுகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பும், பொங்கலிடும் பானையை சுற்றியும் மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம்.



பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரம், சிவஞானபுரம், சேர்வைகாரன்மடம், ஜக்கம்மாள்புரம், செவத்தையாபுரம் ஆகிய கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.மஞ்சள் குலையாக வளர்ந்த பின்னர் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அறுவடை செய்து தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். வழக்கமாக இந்த மஞ்சள் குலைகள் பயிரிடப்பட்டு 6 மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு பயிரிடப்பட்டு உள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.


பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "நாங்கள் ஆண்டு தோறும் மஞ்சள் குலைகள் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு மஞ்சள் குலைகள் நன்கு செழுமையாக வளர்ந்து உள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த மஞ்சள் குலையை அறுவடை செய்து சந்தைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வோம். அதுபோல் வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். இங்கு விளையும் மஞ்சள் குலைகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை. எனவே இந்த ஆண்டு மஞ்சள் குலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்கின்றனர்.


பொங்கல் தொகுப்பில் மஞ்சளுக்கு இடம் கிடைக்குமா..? - விவசாயிகள் கோரிக்கை

அதே நேரத்தில் தமிழர் திருநாளன்று அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மஞ்சளை சேர்த்தால் விவசாயிகள் வாழ்வில் மங்கலம் பிறக்கும் என்கின்றனர் மஞ்சள் குலை விவசாயிகள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
Embed widget