மேலும் அறிய

உச்சத்தில் வெயில் - அதிகரிக்கும் உப்பு உற்பத்தி - விலை குறைவால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு

கடந்த மாதம் வரை டன் ஒன்று ரூபாய் 3500 முதல் 3000 வரைக்கும் விற்பனையான உப்பு தற்போது உற்பத்தி அதிக அளவில் நடைபெறுவதால் டன் 1500 இருந்து 1300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோடை வெயில் உச்சம் காரணமாக மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உப்பு விலை கடும் வீழ்ச்சி டன் ருபாய் 3500 முதல் 3000 வரை விற்பனையான உப்பு விலை ரூபாய் 1300 முதல் 1500 ஆக குறைந்தது.



உச்சத்தில் வெயில் - அதிகரிக்கும் உப்பு உற்பத்தி - விலை குறைவால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது இங்கு சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


உச்சத்தில் வெயில் - அதிகரிக்கும் உப்பு உற்பத்தி - விலை குறைவால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடலோர பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர்.இந்த உப்பு தொழிலை நம்பி சுமார் 50,000 ஆண், பெண் தொழிலாளர்கள் உள்ளனர் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஒன்பது மாதங்கள் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆனால் சில ஆண்டுகளாக உப்பு உற்பத்தி நடைபெறும் காலங்களில் திடீர் திடீரென மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.


உச்சத்தில் வெயில் - அதிகரிக்கும் உப்பு உற்பத்தி - விலை குறைவால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு

இந்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கிய நிலையில் இரண்டு மாதங்களில் திடீர் திடீரென வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக  மழை பெய்தது இதைத் தொடர்ந்து உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 20 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது இதன் காரணமாக உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை டன் ஒன்று ரூபாய் 3500 முதல் 3000 வரைக்கும் விற்பனையான உப்பு தற்போது உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுவதால் டன் 1500 இருந்து 1300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பு நல்ல விளைச்சல் கண்டு வருவதால் உப்பை தேக்கி வைக்கும் பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தலைப்பு செய்திகள்

சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்: முழு விவரம் உள்ளே!
சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்: முழு விவரம் உள்ளே!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
நெல் சாகுபடிக்கு ஆப்பு வைக்கும் தண்ணீர் பற்றாக்குறை! – தீர்வை நோக்கி நகரும் மயிலாடுதுறை விவசாயிகள்
நெல் சாகுபடிக்கு ஆப்பு வைக்கும் தண்ணீர் பற்றாக்குறை! – தீர்வை நோக்கி நகரும் மயிலாடுதுறை விவசாயிகள்
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Embed widget