மேலும் அறிய

நெல் சாகுபடிக்கு ஆப்பு வைக்கும் தண்ணீர் பற்றாக்குறை! – தீர்வை நோக்கி நகரும் மயிலாடுதுறை விவசாயிகள்

மயிலாடுதுறை சோழன்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 மானியமும், 50% மானியத்தில் உரங்களும் வழங்கப்படும் என ஆரூரான் சர்க்கரை ஆலை அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சோழன்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, கால்ஸ் குழுமம் மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, கரும்பு மற்றும் நெல் விவசாயிகளுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை சிறப்பாக நடத்தின. டெல்டா பகுதியில் கரும்பு மற்றும் நெல் சாகுபடியை ஊக்கப்படுத்தவும், நவீன நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு

இக்கூட்டத்திற்கு திரு ஆரூரான் சர்க்கரை ஆலையின் முதுநிலை மேலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை துணை மேலாளர் சுப்பையன் மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் கோவிந்தராசு ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்குச் சாகுபடி பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இக்கூட்டத்தில் ஆனந்தகுடி, பொன்னூர், பாண்டூர், சோழன்பேட்டை, திருமங்கலம், காளி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கரும்பு விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்படும் சலுகைகள்

கூட்டத்தில் விவசாயிகளிடையே ஆலை முதுநிலை மேலாளர் ஆனந்தகுமார் பேசியதாவது; "மயிலாடுதுறைப் பகுதியில் கரும்பு விவசாயத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர ஆலை நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. கரும்பு பயிரிட விரும்பும் விவசாயிகளுக்குத் தேவையான வங்கி கடனுதவிகள் ஆலை நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.13,000 மானியமாக வழங்கப்படும்.
விவசாயிகளின் சொந்த நிலத்திலேயே தரமான விதை கரும்பு உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிர் பாதுகாப்பிற்குத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகள், பூஞ்சாணக் கொல்லி மருந்துகள், நுண்ணூட்டச் சத்து உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் அனைத்தும் 50 சதவீத மானிய விலையில் ஆலையின் மூலமாகவே நேரடியாக வழங்கப்படும். கரும்பு அறுவடை செய்யப்பட்டு ஆலைக்கு ஏற்றி முடிந்தவுடன், அதற்கான கிரயத் தொகை அரசின் வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் விவசாயிகளின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்" என்று உறுதியளித்தார்.

இயற்கை விவசாயம் மற்றும் உர நிர்வாகம்

இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, மண் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.‌ மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் கோவிந்தராசு மற்றும் அதிகாரி விஜயராகவன் ஆகியோர் பேசுகையில், நெல் சாகுபடியில் மத்திய அரசால் வழங்கப்படும் உரங்களின் பயன்பாடு, அடி உரம் சரியான அளவில் மற்றும் சரியான முறையில் பயன்படுத்தும் விதம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

விவசாயிகளின் வரவேற்பு

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கையில், "தற்போது நிலவி வரும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்றுப் பயிராகக் கரும்பு சாகுபடி சிறந்த தேர்வாக அமையும். கரும்பு பயிரிடுவதன் மூலம் குறைந்த தண்ணீரில் அதிக லாபம் ஈட்ட முடியும். ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள பல்வேறு மானியத் திட்டங்களும், கடன் உதவிகளும் எங்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளன. எனவே, வரும் பருவத்தில் கரும்பு உற்பத்தியில் அதிகளவில் ஈடுபட ஆர்வமாக உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக கரும்பு அலுவலர் ஜெயபாண்டியன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் கரும்பு ஆய்வாளர்கள் கணேசன், லோகேஷ் மற்றும் ஆலை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget