மேலும் அறிய

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் - கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவு

மழையால் பாதிக்கப்பட்ட குறுவை  மற்றும் சம்பா நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை வேளாண்மை துறையும் வருவாய்த் துறையும் இணைந்து நடத்த மாவட்ட ஆட்சியர்  காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை  மற்றும் சம்பா நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவ மழை பொய்த்துப் போனதன் காரணத்தினாலும் விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி என்பது ஒருபோக சம்பா சாகுபடி பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டதன் காரணத்தினால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்கூட்டியே சாகுபடி பணிகளை தொடங்கியதால் தற்பொழுது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.


திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் -  கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை  மற்றும் சம்பா நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை வேளாண்மை துறையும் வருவாய்த் துறையும் இணைந்து நடத்த மாவட்ட ஆட்சியர்  காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி பரவலாக கன மழை பெய்தது. இந்த மழையில் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழை நீரை வடிய வைக்க விவசாயிகள் தற்போது பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மழை நீரால் சாய்ந்த நெற்பயிர்கள் முளைக்கவும் தொடங்கி விட்டன. மே 24ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், மிகுந்த நம்பிக்கையுடன் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அறுவடை தருணத்தை எட்டிய நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை விவசாயிகளுக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சம்பா சாகுபடி விவசாய நிலங்களில் நேரடி நெல் தெளிப்பு தெளித்த வயல்களிலும் தண்ணீர் தேங்கி, தெளித்த விதைகளையும்  சேதப்படுத்தி உள்ளது. இந்த சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் , தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் -  கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவு

இதுகுறித்து தொடர்ச்சியாக பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த குறுவை மற்றும் சம்பா சாகுபடி வயல்கள் குறித்து வேளாண்மை துறையும் வருவாய் துறையும் இணைந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கணக்கெடுப்பு பணி நடத்தி முடித்தவுடன் உடனடியாக விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget