மேலும் அறிய

குறுவை சாகுபடி நேரத்தில் உரம் தட்டுப்பாடு ... சாக்குகளை அணிந்து மனு கொடுத்த விவசாயிகள்..!

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. 

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொடங்கப்பட்டுள்ள நேரத்தில் உரத்தட்டுப்பாடு அதிகம் இருப்பதாக கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் சாக்குகளை அணிந்தும், கரும்பு தோகைகளை ஏந்தியும் வந்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜிடம் மனு ஒன்றை அளித்தனர். 


குறுவை சாகுபடி நேரத்தில் உரம் தட்டுப்பாடு ... சாக்குகளை அணிந்து மனு கொடுத்த விவசாயிகள்..!

அதில் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொடங்கப்பட்டுள்ள நேரத்தில் உரத்தட்டுப்பாடு அதிகம் இருப்பதாகவும், தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியும், நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரியும் முறையிட்டனர். இதனால் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், கடந்த ஆண்டு சம்பா, தாளடிக்கு செய்யப்பட்ட பயிர் காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதை வட்டியுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எஸ். முஹம்மது இப்ராஹிம், மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்னர் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், 
ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக கூறப்படுவதால் பருத்தி கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே கொள்முதல் நிலையங்களில் பருத்தி உலர் இயந்திரங்களை அமைக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 700 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைகிறது எனவும் மதுக்கூர் ஒன்றிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.பி. சந்திரன் கூறியுள்ளார். விவசாயிகள் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். வருகிற ஞாயிற்றுக்கிழமையும் கொள்முதல் செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளேன் என கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகளின் உழைப்பு வீணாகாது; பொதுமக்களுக்கு அரிசி தட்டுப்பாடு வராது – அமைச்சர் அதிரடி!
விவசாயிகளின் உழைப்பு வீணாகாது; பொதுமக்களுக்கு அரிசி தட்டுப்பாடு வராது – அமைச்சர் அதிரடி!
உள்நாட்டு விவசாய எதிர்காலத்தை மாற்றும் இந்திய-இஸ்ரேல் தொழில்நுட்பம் - விவரிக்கும் அதிகாரி
உள்நாட்டு விவசாய எதிர்காலத்தை மாற்றும் இந்திய-இஸ்ரேல் தொழில்நுட்பம் - விவரிக்கும் அதிகாரி

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
Diesel MPV: பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget