மேலும் அறிய

தண்ணீரின்றி காயுது வயல்... கருகுது நெற்பயிர்: ஒரத்தநாடு அருகே குடங்களில் தண்ணீர் பிடித்து ஊற்றும் விவசாயிகள்

கருகி வரும் பயிர்களை ஓரளவு காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இவ்வாறு தண்ணீரை ஊற்றி வருகிறார்கள்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடவு செய்த குறுவை நெற் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றி வருகின்றனர்.

சோழ நாடு சோறுடைத்து என்பார்கள். இதற்கான அர்த்தம் சோழ நாடான தஞ்சையில் நிறைய நெல் விளைந்து மக்களோட பசியைப் போக்கியது என்பதுதான். அந்த வகையில் நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் வெகு மும்முரம் அடைந்து வருகிறது. கடந்தாண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடந்தது. இந்தாண்டு வழக்கம் போல் ஜூன் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் போதுமான விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் காட்டினர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 32 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தண்ணீரின்றி காயுது வயல்... கருகுது நெற்பயிர்: ஒரத்தநாடு அருகே குடங்களில் தண்ணீர் பிடித்து ஊற்றும் விவசாயிகள்

குறுவை சாகுபடி இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் இருந்து பாசனத்துக்காக ஜூன் மாதம் 16ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போது 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. அதன்பின்னர் போதிய அளவு மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீர் திறக்கப்படாததாலும் தொடர்ந்து மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

இதையடுத்து ஆறுகளில் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கல்லணைக் கால்வாயில் தற்போது 1,500 கன அடி வீதம் தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கல்லணைக் கால்வாயில் உள்ள பல்வேறு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் உரிய முறையில் பாசனத்துக்கு செல்வதில்லை.

இதனால் கல்லணைக் கால்வாய் பாசனத்திற்குட்பட்ட ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் நடவு செய்யப்பட்டு உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவு குறுவை நெற்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து நட்ட பயிர்கள் கருகி வருவதை கண்டு கலங்கிய விவசாயிகள் குடத்தில் தண்ணீரை பிடித்து வந்து நெல் வயல்களில் ஊற்றி வருகிறார்கள். இதனால் கருகி வரும் பயிர்களை ஓரளவு காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இவ்வாறு தண்ணீரை ஊற்றி வருகிறார்கள்.
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget