மேலும் அறிய

தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மற்றும் நல்ல மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர் என்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பை விரும்பி சாப்பிடுவார்கள்.


தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

சூரியபகவானுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகைக்கு முக்கியமான ஒன்றான செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்று. தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள்.

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?

தமிழர்கள் பாரம்பரியமாக திருவிழாவாக கொண்டாடப்படும் தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவு வருவது இனிக்கும் பொங்கல், அதுபோக இனிக்கும் கரும்பு. இந்த கரும்பு என்பது பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பொங்கல் திருவிழாவை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிடுகின்றனர் தமிழர்கள்.

தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். காரணம் இந்த காலக்கட்டத்தில் நடவு செய்தால் தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால் தான் ஏப்ரல் கடைசி வாரத்தில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொங்கல் கரும்புகள் நடவுப்பணிகள் நடந்தது.

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், கூழையனூர், கோட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் அவை நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் தற்போது கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விளையும் கரும்புகள் அதிக இனிப்பு சுவை கொண்டதாக இருக்கிறது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.


தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், அரசு கரும்புகளை கொள்முதல் செய்யும் போது சில நிபந்தனைகள் விதிக்கிறது. உயரமான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. ஆனால் உயரம் குறைவாக உள்ள கரும்புகளை எடுப்பதில்லை. வியாபாரிகள் அனைத்தையும் கலந்து எடுத்துக் கொள்கின்றனர். அதனால் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம். எனவே வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம் என்றனர். மேலும் கரும்புகள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால், ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மற்றும் நல்ல மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர் என்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget