மேலும் அறிய

தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மற்றும் நல்ல மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர் என்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பை விரும்பி சாப்பிடுவார்கள்.


தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

சூரியபகவானுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகைக்கு முக்கியமான ஒன்றான செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்று. தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள்.

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?

தமிழர்கள் பாரம்பரியமாக திருவிழாவாக கொண்டாடப்படும் தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவு வருவது இனிக்கும் பொங்கல், அதுபோக இனிக்கும் கரும்பு. இந்த கரும்பு என்பது பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பொங்கல் திருவிழாவை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிடுகின்றனர் தமிழர்கள்.

தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். காரணம் இந்த காலக்கட்டத்தில் நடவு செய்தால் தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால் தான் ஏப்ரல் கடைசி வாரத்தில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொங்கல் கரும்புகள் நடவுப்பணிகள் நடந்தது.

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூர், கூழையனூர், கோட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் அவை நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் தற்போது கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விளையும் கரும்புகள் அதிக இனிப்பு சுவை கொண்டதாக இருக்கிறது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.


தேனியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்பு... கட்டு ரூ.300 வரையில் விற்பனை

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், அரசு கரும்புகளை கொள்முதல் செய்யும் போது சில நிபந்தனைகள் விதிக்கிறது. உயரமான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. ஆனால் உயரம் குறைவாக உள்ள கரும்புகளை எடுப்பதில்லை. வியாபாரிகள் அனைத்தையும் கலந்து எடுத்துக் கொள்கின்றனர். அதனால் நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம். எனவே வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம் என்றனர். மேலும் கரும்புகள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால், ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து மற்றும் நல்ல மழை பெய்ததால் கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர் என்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!
ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன? மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் சொல்லும் சீக்ரெட்!
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
கண்ணீர் வடிக்கும் காவிரி டெல்டா: குறுவை சாகுபடி கைநழுவுகிறது; சம்பா சாகுபடியாவது தப்புமா?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Maruti Jimny New Variants: இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
Embed widget