மேலும் அறிய

அறுவடைக்கு தயாரான வயலுக்குள் புகுந்த கண்மாய் நீர்; வாளி மூலம் வெளியேற்றும் சிவகங்கை விவசாயிகள் 

மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைந்த மடைகளை சீர் செய்யாமல் விவசாயிகளின் குறைகளை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்தது. இதனால் பெருமளவு சேதமடைந்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது. டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது.


அறுவடைக்கு தயாரான வயலுக்குள் புகுந்த கண்மாய் நீர்; வாளி மூலம் வெளியேற்றும் சிவகங்கை விவசாயிகள் 

இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது பல்வேறு இடங்கள் ஓரளவு மீண்டு வருகிறது.  இதே போல் சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் மழை நீர் சூழ்ந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த வயலுக்குள் புகுந்த கண்மாய் நீரை வாளி மூலம் தண்ணீரை வெளியேற்றும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அறுவடைக்கு தயாரான வயலுக்குள் புகுந்த கண்மாய் நீர்; வாளி மூலம் வெளியேற்றும் சிவகங்கை விவசாயிகள் 


சிவகங்கை மாவட்டம் சோழபுரம் பகுதியில் அதிகளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியில் எட்டுச் சேரி என்னும் கண்மாய் மூலம் சுமார் 300 ஏக்கருக்கு மேல் பாசான வசதி பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கண்மாய்க்கு 4 மடைகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே 2 மடைகள் சேதமடைந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். உடைந்த மடைகளை  சீர் செய்ய வேண்டுமென பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் எட்டு சேரி கண்மாய் முழுவதும் நிறைந்து உடைந்த மடைவெளியாக தண்ணீர் வெளியேறி வருகின்றது.


அறுவடைக்கு தயாரான வயலுக்குள் புகுந்த கண்மாய் நீர்; வாளி மூலம் வெளியேற்றும் சிவகங்கை விவசாயிகள் 

அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உடைந்த மடையை சீர் செய்யாததால் அப்பகுதி விவசாயிகளே கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் மடையை அடைத்துள்ளனர்.  தற்போது அறுவடை செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் மடையில் உடைப்பு ஏற்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்வெளி பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் நெற் கதிர்கள் முழுவதுமாக  சாய்ந்து அழுகிய நிலையில் உள்ளது. அந்த நெற் கதிர்களை காப்பாற்ற வயல் வெளியில் உள்ள தண்ணீரை ஊற்று வாய்க்கால் போட்டு இரவு பகலாக வாளி மூலம் தண்ணீரை இறைக்கும்  பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உடைந்திருக்கும் மடைகளை விரைந்து பொதுப்பணித்துறையினர் சீர் செய்ய வேண்டும் எனவும் அப்படி சீர் செய்யாவிட்டால் அப்பகுதியில் உள்ள நெற் கதிர்கள் அனைத்தும் வீணாகி அழுகிவிடும்  விடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.


அறுவடைக்கு தயாரான வயலுக்குள் புகுந்த கண்மாய் நீர்; வாளி மூலம் வெளியேற்றும் சிவகங்கை விவசாயிகள் 

மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைந்த மடைகளை சீர் செய்யாமல் விவசாயிகளின் குறைகளை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள மடைகளை விரைந்து சீரமைத்து விவசாயிகளை பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Embed widget