மேலும் அறிய

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உளவு செய்து நெல் பயிரிடும் பணிகள் கரூர் அருகே தற்போது நடந்து வருகிறது.

விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை இயந்திரம் மூலம் நெல் நடவு பணி.

விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் கரூர் அருகே இயந்திரங்கள் மூலம் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் குருவை சாகுபடி விட, சம்பா சாகுபடியில் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நடப்பு ஆண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை மற்றும் அமராவதி அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உளவு செய்து நெல் பயிரிடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

 


கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

 

நெல் அறுவடை செய்ய ஆள் இல்லாததால், இப்போது மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தால், நெல் மற்றும் மற்ற பயிர்கள் வீணாகி கொண்டிருக்கின்றன. ஆகையால், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால்,100 நாள் வேலை திட்டத்தை கிராம பஞ்சாயத்துகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கடந்த மாதம் கரூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் நவீன இயந்திரங்கள் மூலம் நேரடியாக நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.



கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

 

கரூர் அருகே, செல்லாண்டிபாளையம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது வழக்கமாக நெல் நாற்று விட்டு 20 முதல் 30 நாட்கள் கழித்து நெல் நாற்று நடுவது வழக்கம். தற்போது விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறைவாக உள்ளதால், நெல் நடவு இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறோம். நெல் நாற்றம் வரிசையாக இயந்திரம் மூலம் நடும்போது சூரிய ஒளி படுவதால் எலி தொல்லை இருக்காது. களை எடுப்பதிலும் சிரமம் இல்லை என்று  அவர்கள் தெரிவித்தனர்.

 

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

பண்டிகை சீசன் முடிந்ததால் விலை குறையும், வாழைத்தார்.

ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை சீசன் முடிவடைந்துள்ளதால், கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் விலை குறைந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகை மலை, வேலாயுதம்பாளையம், லாலாபேட்டை, வாங்கல், கடவூர், நெருர், மணவாசி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆயுத பூஜை பண்டிகைகள், திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களால் வாழைத்தாருக்கு அதிக விலை கிடைத்தது. ஆனால், பருவநிலை காலம் மாதம் தற்போது வாழைத்தாருக்கு தேவை குறைந்து வருகிறது. ஆயுத பூஜை பண்டிகையின் போது 600 ரூபாய் வரை விற்ற பூவன் வாழைத்தாரின் விலை, இன்று  400 ரூபாயாக விலை குறைந்தது. அதேபோல் ரஸ்தாளி, கற்பூரவள்ளி ,மொந்தன் உள்ளிட்ட வாழைத்தார்களும் சராசரியாக 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

தினசரி அறுவடை... தடையற்ற வருமானம்! பல பயிர் சாகுபடியால் குவியும் லாபம் - கலக்கும் விழுப்புரம் விவசாயி
தினசரி அறுவடை... தடையற்ற வருமானம்! பல பயிர் சாகுபடியால் குவியும் லாபம் - கலக்கும் விழுப்புரம் விவசாயி
விவசாயிகளின் குரல் ஆட்சியரின் செவிகளுக்கு! நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எப்போது தெரியுமா..?
விவசாயிகளின் குரல் ஆட்சியரின் செவிகளுக்கு! நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எப்போது தெரியுமா..?
மானியங்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைக்க இந்த ஒரு விஷயம் கட்டாயம்! - மாவட்ட ஆட்சியர் தகவல்
மானியங்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைக்க இந்த ஒரு விஷயம் கட்டாயம்! - மாவட்ட ஆட்சியர் தகவல்
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. (e-NAM) திட்டத்தில் நேரடி விற்பனையால் அதிக லாபம் பெறலாம் !
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. (e-NAM) திட்டத்தில் நேரடி விற்பனையால் அதிக லாபம் பெறலாம் !

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget