மேலும் அறிய

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உளவு செய்து நெல் பயிரிடும் பணிகள் கரூர் அருகே தற்போது நடந்து வருகிறது.

விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை இயந்திரம் மூலம் நெல் நடவு பணி.

விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் கரூர் அருகே இயந்திரங்கள் மூலம் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் குருவை சாகுபடி விட, சம்பா சாகுபடியில் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நடப்பு ஆண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை மற்றும் அமராவதி அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உளவு செய்து நெல் பயிரிடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

 


கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

 

நெல் அறுவடை செய்ய ஆள் இல்லாததால், இப்போது மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தால், நெல் மற்றும் மற்ற பயிர்கள் வீணாகி கொண்டிருக்கின்றன. ஆகையால், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால்,100 நாள் வேலை திட்டத்தை கிராம பஞ்சாயத்துகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கடந்த மாதம் கரூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் நவீன இயந்திரங்கள் மூலம் நேரடியாக நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.



கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

 

கரூர் அருகே, செல்லாண்டிபாளையம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது வழக்கமாக நெல் நாற்று விட்டு 20 முதல் 30 நாட்கள் கழித்து நெல் நாற்று நடுவது வழக்கம். தற்போது விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறைவாக உள்ளதால், நெல் நடவு இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறோம். நெல் நாற்றம் வரிசையாக இயந்திரம் மூலம் நடும்போது சூரிய ஒளி படுவதால் எலி தொல்லை இருக்காது. களை எடுப்பதிலும் சிரமம் இல்லை என்று  அவர்கள் தெரிவித்தனர்.

 

கரூர் அருகே விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை.. இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்..

பண்டிகை சீசன் முடிந்ததால் விலை குறையும், வாழைத்தார்.

ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை சீசன் முடிவடைந்துள்ளதால், கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் விலை குறைந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகை மலை, வேலாயுதம்பாளையம், லாலாபேட்டை, வாங்கல், கடவூர், நெருர், மணவாசி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆயுத பூஜை பண்டிகைகள், திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களால் வாழைத்தாருக்கு அதிக விலை கிடைத்தது. ஆனால், பருவநிலை காலம் மாதம் தற்போது வாழைத்தாருக்கு தேவை குறைந்து வருகிறது. ஆயுத பூஜை பண்டிகையின் போது 600 ரூபாய் வரை விற்ற பூவன் வாழைத்தாரின் விலை, இன்று  400 ரூபாயாக விலை குறைந்தது. அதேபோல் ரஸ்தாளி, கற்பூரவள்ளி ,மொந்தன் உள்ளிட்ட வாழைத்தார்களும் சராசரியாக 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget