மேலும் அறிய

மயிலாடுதுறையில் மண்டியிட்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயி - எதற்காக தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் மண்டியிட்டபடி கூட்ட அரங்கிற்கு வந்து நூதன முறையில் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய தாலுக்கா பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி மனுக்களை அளித்தனர்.  

மண்டியிட்டு மனு அளித்த விவசாயி 

அப்போது மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் இருந்து கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு கையில் மனுவுடன் மண்டியிட்டு வந்து, பழங்காவேரி ஆற்றை தூய்மைப்படுத்த கோரி நூதன முறையில் மனு அளித்தார். மேலும் தான் தொடர்ந்து 8 ஆண்டுகளாக இதுகுறித்து மனு அளித்து வருவதாகவும், தான் அளித்த மனுவிற்கு இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காததால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க கோரியதால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மயிலாடுதுறையில் மண்டியிட்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயி - எதற்காக தெரியுமா?

வேதனை தெரிவித்த விவசாயி

மயிலாடுதுறை நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் பழங்காவிரி வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள் மிகவும் மோசமான பாதாள சாக்கடை கழிவுநீரை திறந்துவிடப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி எட்டு ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசன வசதி வழங்கிய பழங்காவிரி தற்போது குப்பை மற்றும் கழிவுநீரால் சூழப்பட்டு இருப்பதால் காவேரி நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் மண்டியிட்டு மனு அளித்ததாக அவர் வேதனை பட தெரிவித்தார்.


மயிலாடுதுறையில் மண்டியிட்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயி - எதற்காக தெரியுமா?

மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதி

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பழங்காவேரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், குப்பைகளை போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினர். இது தொடர்பாக திட்டம் தயாரிக்கப்பட்டு மாபெரும் தூய்மை பணி பழங்காவிரியில் மேற்கொள்ளப்பட்டு காவிரி தண்ணீர் செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயி போராட்டத்தை கைவிட்டு இருக்கையில் அமர்ந்தார். மேலும் விவசாயி ஒருவர் மண்டியிட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சந்திரகவிதா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை! பாதிப்புகள் என்ன? வானிலை அறிக்கை பரபரப்பு!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை! பாதிப்புகள் என்ன? வானிலை அறிக்கை பரபரப்பு!
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
Embed widget