மேலும் அறிய

விவசாயிகள் கொந்தளிப்பு! பி.ஆர். பாண்டியனின் சிறை தண்டனைக்கு எதிராக திரண்ட எதிராக விவசாயிகள்..

தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவரான பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சீர்காழி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவரான பி.ஆர். பாண்டியனுக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விவசாயிகள் ஏராளமானோர் திரண்டு பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி காவல் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

தண்டனைக்கான பின்னணி

கடந்த 2015-ன் ஆண்டு ONGC -க்கு எதிரான போராட்டம்

பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்துடன் தொடர்புடையது.

அப்போது, திருவாரூர் மாவட்டம் விக்ரபாண்டியம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. (ONGC) நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்தது. விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் பாழாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தீவிரமாகப் போராடினர்.

இந்த தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராகக் காரியமங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகக் கூறி, பி.ஆர். பாண்டியன் உட்படப் பல விவசாயிகள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பாக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், பி.ஆர். பாண்டியன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதோடு, அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் காரணமாக, தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவரான பி.ஆர். பாண்டியன் நேற்று கைது செய்யப்பட்டார்.

சீர்காழியில் விவசாயிகளின் குரல்

பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்ட செய்தி காட்டுத் தீயெனப் பரவியதையடுத்து, தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவரது கைதைக் கண்டிக்கும் வகையில் சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

சீர்காழி காவல் நிலையம் எதிரே, கோபத்துடன் திரண்ட ஏராளமான விவசாயிகள், "விவசாயிகளின் பாதுகாவலர் பி.ஆர். பாண்டியன் கைதுக்குக் கண்டனம்!", "விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் அரசுகளே, ஓ.என்.ஜி.சி.க்கு ஆதரவு தருவதைத் தடுத்து நிறுத்துங்கள்!" போன்ற முழக்கங்களை உரக்க எழுப்பினர். 

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது: "காரியமங்கலம் போராட்டம் என்பது விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க நடத்திய தர்மப் போராட்டம். மீத்தேன் போன்ற அழிவுத் திட்டங்களை எதிர்ப்பது ஒவ்வொரு விவசாயியின் கடமை. ஆனால், அரசு விவசாயிகளைப் பழிவாங்க நினைக்கிறது. ஒரு மக்கள் தலைவருக்கு, அதுவும் விவசாயிகளுக்காகப் போராடிய ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது அநீதியின் உச்சம். இது ஜனநாயகத்தில் போராட்ட உரிமைக்கே விழுந்த பேரிடி."

முக்கிய கோரிக்கை: வழக்கை ரத்து செய்து விடுதலை செய்க!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும், பி.ஆர். பாண்டியன் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும், பி.ஆர். பாண்டியன் விடுதலை ஆகும் வரைத் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் சங்கத்தின் பிற நிர்வாகிகள் சூளுரைத்தனர்.

சட்டம்-ஒழுங்கு நிலை

காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளின் தலைவர்களில் ஒருவரான பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது, இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி ஆர்ப்பாட்டத்தையடுத்து, வேறு எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கக் காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டம் டெல்டா மாவட்ட அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget