மேலும் அறிய

மயிலாடுதுறை: டிட்வா புயல் பாதிப்பு! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை விவசாயிகளுக்கு ஆறுதல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிட்வா புயல் சின்னத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து பலத்த கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் மழைநீர் சூழ்ந்து தண்ணீர் வடிய வழியின்றி தேங்கியது. மேலும் டிட்வா புயலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு, மழைநீரை உடனடியாக வடிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவிட்டார்.

நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் 

கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். முதலில், ஆறுபாதி கிராமத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களைப் பார்வையிட்டார். அங்குள்ள விவசாயிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடி, பயிர் பாதிப்பின் விவரங்களையும், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து. மழைநீரை விரைவாக வடிய வைப்பதற்கான விரிவான ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, காலகஸ்தீனாதபுரம் கிராமத்தில் உள்ள சம்பா பயிர்களையும் பார்வையிட்ட ஆட்சியர், கிளை வாய்க்கால்களில் மழைநீர் எவ்விதத் தடையுமின்றி வடிந்து செல்கிறதா? என்பதையும் தீவிரமாக ஆய்வு செய்தார். பின்னர், காளியப்பநல்லூர் கிராமத்திலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிக்கும் பணிகள் தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் புயலையொட்டி பெய்த பெருமழையால் சம்பா சாகுபடி பயிர்களைச் சுற்றி மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனை வடிய வைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து இப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் தீவிரம் 

குடியிருப்புப் பகுதிகளை சுற்றியுள்ள மழைநீரை வடியவைக்கும் பணிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோரும் ஈடுபட்டுள்ளனர்.

புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு (Control Room) வரும் புகார்கள் மீது, துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது, பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் மற்றும் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, சுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டு

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இதுவரை அதிகாரிகள், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என யாரும் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என்று விவசாயிகளும், மாவட்ட மக்களும் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த குற்றச்சாட்டை போக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள இந்தத் துரித நடவடிக்கை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
OTP Mandatory Tatkal Ticket Booking : இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
OTP Mandatory Tatkal Ticket Booking : இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Embed widget