மேலும் அறிய

கும்பகோணத்தில் புல் விற்பனை அமோகம்: தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகள்  - விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்ட பகுதிகளில் வைக்கோல் விற்பனை சரிந்து விட்டது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆடு, மாடுகளுக்கு தேவையான புல் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட பகுதிகளில் வைக்கோல் விற்பனை சரிந்து விட்டது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆடு, மாடுகளுக்கு தேவையான புல் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக சாகுபடி இல்லாத நேரங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பால் வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் வீட்டில் நிச்சயம் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் இருக்கும். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அதிகளவில் கால்நடை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால் வைக்கோல் பாதித்ததால் வியாபாரிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் வயல்களில் வைக்கோல் கட்டுகள் தேங்கி கிடக்கிறது. கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆடு, மாடுகளை பொறுத்தவரை தீவனத்துக்கு என்று பெரும்பாலும் செலவுகள் இருக்கும்.

அவைகளுக்கு பசுந்தீவனம், அடர் தீவனம் மட்டுமல்லாமல் உலர் தீவனமும் கொடுக்க வேண்டியதுள்ளது. இதற்காகவே அறுவடை செய்யும் காலத்தில் கிடைக்கும் சோளத்தட்டை, வைக்கோல் போன்றவற்றை வாங்கியும், தங்களின் வயலில் கிடைப்பதை இருப்பு வைத்து தீவனமாக பயன்படுத்துவார்கள். தற்போது உலர் தீவனத்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் வைக்கோல்களை வெளியில் இருந்து தான் வாங்கி பயன்படுத்துகின்றனர்.


கும்பகோணத்தில் புல் விற்பனை அமோகம்: தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகள்  - விவசாயிகள் வேதனை

வழக்கமாக நெல் அறுவடை பணிகள் நடக்கும் போது வைக்கோல் வாங்குவதற்காக வெளியூரில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வருவார்கள். அவர்கள் வைக்கோல்களை வாங்கி லோடு ஆட்டோ, லாரிகளில் வெளியூர்களுக்கு எடுத்து செல்வது வழக்கம். காரணம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு போக மற்ற வைக்கோல் கட்டுகளை விற்பனைக்கு தந்து விடுவர். இதனால் பிற மாவட்டங்களில் இருந்து தஞ்சை பகுதிக்கு வந்து வியாபாரிகள் வைக்கோலை வாங்கி சென்று கூடுதல் விலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

தற்போது முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் முடிந்து வைக்கோல் கட்டுகளை தயார் செய்து விற்பனைக்காக விவசாயிகள் வைத்துள்ளனர். ஆனால் வைக்கோல் கட்டுகளை வாங்க வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் கும்பகோணம் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வயல்வெளிகளில் வைக்கோல் கட்டுகள் ஆங்காங்கே தேங்கியுள்ளன. கும்பகோணத்தை அடுத்துள்ள ஏரகரம் பகுதியில் வைக்கோல் கட்டுகள் தேங்கியுள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் ஒரு கட்டு வைக்கோல் ரூ. 75 முதல் ரூ.100 வரை விற்பனையாகியுள்ளது. இங்குள்ள வைக்கோல்கட்டுகளை வெளிமாவட்டங்கள், வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள். கடந்த சில நாட்களாக கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் வைக்கோல் விற்பனை பாதித்துள்ளது.

மழையால் பெரும்பாலான இடங்களில் புற்கள் வளர்ந்துள்ளன. சிலர் இதற்காக பண்ணை போல் அமைத்து புற்களை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். வைக்கோல் விலையை விட புல் விலை குறைவாக உள்ளதால் வைக்கோலை வாங்கி வைக்க விரும்புவதில்லை. தற்போது ஒரு வைக்கோல் கட்டு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்தாலும் வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை.

வீடுகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் மட்டுமே தேவைக்கு ஏற்றவாறு வாங்கி செல்கின்றனர். கால்நடை வளர்ப்பவர்கள் இப்போது அதிகளவில் புல் வாங்குவதால் வைக்கோல் கட்டுகள் தேங்கி கிடக்கிறது என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget