மேலும் அறிய

கும்பகோணத்தில் புல் விற்பனை அமோகம்: தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகள்  - விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்ட பகுதிகளில் வைக்கோல் விற்பனை சரிந்து விட்டது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆடு, மாடுகளுக்கு தேவையான புல் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட பகுதிகளில் வைக்கோல் விற்பனை சரிந்து விட்டது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆடு, மாடுகளுக்கு தேவையான புல் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக சாகுபடி இல்லாத நேரங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பால் வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் வீட்டில் நிச்சயம் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் இருக்கும். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் அதிகளவில் கால்நடை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால் வைக்கோல் பாதித்ததால் வியாபாரிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் வயல்களில் வைக்கோல் கட்டுகள் தேங்கி கிடக்கிறது. கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆடு, மாடுகளை பொறுத்தவரை தீவனத்துக்கு என்று பெரும்பாலும் செலவுகள் இருக்கும்.

அவைகளுக்கு பசுந்தீவனம், அடர் தீவனம் மட்டுமல்லாமல் உலர் தீவனமும் கொடுக்க வேண்டியதுள்ளது. இதற்காகவே அறுவடை செய்யும் காலத்தில் கிடைக்கும் சோளத்தட்டை, வைக்கோல் போன்றவற்றை வாங்கியும், தங்களின் வயலில் கிடைப்பதை இருப்பு வைத்து தீவனமாக பயன்படுத்துவார்கள். தற்போது உலர் தீவனத்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் வைக்கோல்களை வெளியில் இருந்து தான் வாங்கி பயன்படுத்துகின்றனர்.


கும்பகோணத்தில் புல் விற்பனை அமோகம்: தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகள்  - விவசாயிகள் வேதனை

வழக்கமாக நெல் அறுவடை பணிகள் நடக்கும் போது வைக்கோல் வாங்குவதற்காக வெளியூரில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வருவார்கள். அவர்கள் வைக்கோல்களை வாங்கி லோடு ஆட்டோ, லாரிகளில் வெளியூர்களுக்கு எடுத்து செல்வது வழக்கம். காரணம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு போக மற்ற வைக்கோல் கட்டுகளை விற்பனைக்கு தந்து விடுவர். இதனால் பிற மாவட்டங்களில் இருந்து தஞ்சை பகுதிக்கு வந்து வியாபாரிகள் வைக்கோலை வாங்கி சென்று கூடுதல் விலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

தற்போது முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் முடிந்து வைக்கோல் கட்டுகளை தயார் செய்து விற்பனைக்காக விவசாயிகள் வைத்துள்ளனர். ஆனால் வைக்கோல் கட்டுகளை வாங்க வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் கும்பகோணம் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வயல்வெளிகளில் வைக்கோல் கட்டுகள் ஆங்காங்கே தேங்கியுள்ளன. கும்பகோணத்தை அடுத்துள்ள ஏரகரம் பகுதியில் வைக்கோல் கட்டுகள் தேங்கியுள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் ஒரு கட்டு வைக்கோல் ரூ. 75 முதல் ரூ.100 வரை விற்பனையாகியுள்ளது. இங்குள்ள வைக்கோல்கட்டுகளை வெளிமாவட்டங்கள், வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள். கடந்த சில நாட்களாக கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் வைக்கோல் விற்பனை பாதித்துள்ளது.

மழையால் பெரும்பாலான இடங்களில் புற்கள் வளர்ந்துள்ளன. சிலர் இதற்காக பண்ணை போல் அமைத்து புற்களை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். வைக்கோல் விலையை விட புல் விலை குறைவாக உள்ளதால் வைக்கோலை வாங்கி வைக்க விரும்புவதில்லை. தற்போது ஒரு வைக்கோல் கட்டு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்தாலும் வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை.

வீடுகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் மட்டுமே தேவைக்கு ஏற்றவாறு வாங்கி செல்கின்றனர். கால்நடை வளர்ப்பவர்கள் இப்போது அதிகளவில் புல் வாங்குவதால் வைக்கோல் கட்டுகள் தேங்கி கிடக்கிறது என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்?  இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்? இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது" ஜெக்தீப் தன்கர் எங்கே? - 11 மணி செய்திகள்
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்?  இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்? இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது" ஜெக்தீப் தன்கர் எங்கே? - 11 மணி செய்திகள்
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
Tata Discount: 1.40 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. ஹுண்டாய்க்கு போட்டியாக ஆஃபர்களை அள்ளித்தெளித்த டாடா...!
Tata Discount: 1.40 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. ஹுண்டாய்க்கு போட்டியாக ஆஃபர்களை அள்ளித்தெளித்த டாடா...!
Tamilnadu Roundup: திருப்பூரில் முதலமைச்சர் ஆய்வு.. தென் தமிழகத்தில் தொடரும் மழை - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: திருப்பூரில் முதலமைச்சர் ஆய்வு.. தென் தமிழகத்தில் தொடரும் மழை - 10 மணி சம்பவங்கள்
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
Embed widget