மேலும் அறிய

வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற் பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நெல் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கரூர் கலெக்டர் பிரபு சங்கர் விளக்கமளித்துள்ளார்.

 


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

கரூர், மழைக்காலங்களில் நெற்பயிரை காக்கும் வழிமுறைகள் குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளக்கால் பகுதிகள் அல்லது வடிகால் வசதி இல்லாத நிலங்களில் தண்ணீர் தேங்கி, சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்வேறு நிலையில் உள்ள நெற்பயர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற் பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதனால், வேர்ப்பகுதிகளில் பகுதிகளில் நல்ல காற்றோட்டம் உண்டாகும்.

இளம் நெற்பயிர்களானது கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அவ்வாறான சமயங்களில் அதேரகம் மற்றும் வயதுடைய நாற்றுக்களை கரைந்து போன இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். சற்று வயதான நெற்பயிராக இருந்தால், வயலில் அதிக துளிர்கள் இருக்கும் குத்திலிருந்து சில துளிர்களை பிடுங்கி கரைந்து போன இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய நிலையில், நெற்பயிருக்கு பிராண வாயு சரிவர கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். பிராண வாயு பயிருக்கு கிடைக்காமல் போவதால் அதனை சார்ந்த நுண்ணியர்களின் செயல்பாடுகள் குறைந்து விடும் அல்லது நின்று விடும்.


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பமடைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். இந்த குளிர்ந்த நிலையில், மணிச்சத்து, சாம்பல் சத்து, தாமிரச்சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்து விடுவதால் உண்டாகும் பற்றாக்குறையினால் நெற்பயிரின் வளர்ச்சி தடைப்படும்.மழைநீர் வடியும் போது நீருடன் மண்ணில் உள்ள தலைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, போறான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனிசு சத்துக்களின் கறைதிறன் அதிகமாகி தண்ணீரோடு வெளியேறிவிடும். இதனால், நெற்பயிர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்து சரிவர கிடைப்பதில் தடை ஏற்படும்.

குளிர்ச்சியான வெப்ப நிலையில், அங்க பொருட்கள் பதனம் மாற்றம் மாறி சத்துக்களாக உருமாற்றுவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகசத்து பற்றாக்குறை ஏற்பட்டு, பயிரின் தோகைகள் மற்றும் மஞ்சள் நிறமாக மாறி காணப்படும்.மண்ணில் இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனிசு சத்து குறைந்து இலைகளின் விகிதாசாரம் பாதிக்கப்பட்டு இருப்பின் அதிக அதிகமாவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மாங்கனிசு சத்தின் பற்றாக்குறையால் இளைப்புள்ள நோய்கள் உண்டாகும்.


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

வெள்ள நீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா உடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து. மறு நாள் இதனுடன் 17 குழு மூரியேட் பொட்டாசியம் கலந்து வயலில் சீராக இடவேண்டும்.
நுண்ணுட்ட உரகலவையையும் மேலூர் ஆக தெளிக்க வேண்டும். இலை வலி உரமாக அளிக்க வேண்டும். 

எனில், ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிக்சல் பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை இருந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். அல்லது மணிச்சத்தை ஏடிபி உரத்தின் மூலமாக 2 சதவீத அளவில் தெளிக்க வேண்டும். அதாவது ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget