மேலும் அறிய

வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற் பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நெல் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கரூர் கலெக்டர் பிரபு சங்கர் விளக்கமளித்துள்ளார்.

 


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

கரூர், மழைக்காலங்களில் நெற்பயிரை காக்கும் வழிமுறைகள் குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளக்கால் பகுதிகள் அல்லது வடிகால் வசதி இல்லாத நிலங்களில் தண்ணீர் தேங்கி, சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்வேறு நிலையில் உள்ள நெற்பயர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாக்க முடியும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற் பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதனால், வேர்ப்பகுதிகளில் பகுதிகளில் நல்ல காற்றோட்டம் உண்டாகும்.

இளம் நெற்பயிர்களானது கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அவ்வாறான சமயங்களில் அதேரகம் மற்றும் வயதுடைய நாற்றுக்களை கரைந்து போன இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். சற்று வயதான நெற்பயிராக இருந்தால், வயலில் அதிக துளிர்கள் இருக்கும் குத்திலிருந்து சில துளிர்களை பிடுங்கி கரைந்து போன இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய நிலையில், நெற்பயிருக்கு பிராண வாயு சரிவர கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். பிராண வாயு பயிருக்கு கிடைக்காமல் போவதால் அதனை சார்ந்த நுண்ணியர்களின் செயல்பாடுகள் குறைந்து விடும் அல்லது நின்று விடும்.


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பமடைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். இந்த குளிர்ந்த நிலையில், மணிச்சத்து, சாம்பல் சத்து, தாமிரச்சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்து விடுவதால் உண்டாகும் பற்றாக்குறையினால் நெற்பயிரின் வளர்ச்சி தடைப்படும்.மழைநீர் வடியும் போது நீருடன் மண்ணில் உள்ள தலைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, போறான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனிசு சத்துக்களின் கறைதிறன் அதிகமாகி தண்ணீரோடு வெளியேறிவிடும். இதனால், நெற்பயிர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்து சரிவர கிடைப்பதில் தடை ஏற்படும்.

குளிர்ச்சியான வெப்ப நிலையில், அங்க பொருட்கள் பதனம் மாற்றம் மாறி சத்துக்களாக உருமாற்றுவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகசத்து பற்றாக்குறை ஏற்பட்டு, பயிரின் தோகைகள் மற்றும் மஞ்சள் நிறமாக மாறி காணப்படும்.மண்ணில் இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனிசு சத்து குறைந்து இலைகளின் விகிதாசாரம் பாதிக்கப்பட்டு இருப்பின் அதிக அதிகமாவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மாங்கனிசு சத்தின் பற்றாக்குறையால் இளைப்புள்ள நோய்கள் உண்டாகும்.


வடகிழக்கு பருவமழை காலத்தில் நெற் பயிர்கள் மூழ்காமல் பாதுகாப்பது எப்படி?

வெள்ள நீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா உடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து. மறு நாள் இதனுடன் 17 குழு மூரியேட் பொட்டாசியம் கலந்து வயலில் சீராக இடவேண்டும்.
நுண்ணுட்ட உரகலவையையும் மேலூர் ஆக தெளிக்க வேண்டும். இலை வலி உரமாக அளிக்க வேண்டும். 

எனில், ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிக்சல் பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை இருந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். அல்லது மணிச்சத்தை ஏடிபி உரத்தின் மூலமாக 2 சதவீத அளவில் தெளிக்க வேண்டும். அதாவது ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை: அன்புமணி வலியுறுத்தல்!
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை: அன்புமணி வலியுறுத்தல்!
நெல் சாகுபடி செஞ்சா ரூ. 5 லட்சமா? விவசாயிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி – முழு விவரம் உள்ளே!
நெல் சாகுபடி செஞ்சா ரூ. 5 லட்சமா? விவசாயிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி – முழு விவரம் உள்ளே!
புதிய அரசாணை சாத்தியமற்றது; உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!
புதிய அரசாணை சாத்தியமற்றது; உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!
மயிலாடுதுறை விவசாயிகளே ரெடியா? ஜூன் 25-ல் ஆட்சியருடன் நேரடி சந்திப்பு - கோரிக்கைகளை முன்வைக்க அழைப்பு!
மயிலாடுதுறை விவசாயிகளே ரெடியா? ஜூன் 25-ல் ஆட்சியருடன் நேரடி சந்திப்பு - கோரிக்கைகளை முன்வைக்க அழைப்பு!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Qatar fire accident : கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
Embed widget