மேலும் அறிய

குறைந்த செலவில் அமோகமான வருமானம் வேண்டுமா? இந்த சாகுபடி செய்யுங்கள்!!!

செடிகளுக்கு காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் அதிகமாக கிடைக்கும். இதனால் செடிகளில் பூக்களும், காய்களும் கிளைகளின் அடிபாகத்தில் இருந்தே தோன்றுகிறது இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிகாட்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் மும்முரமாக உள்னர். குறைந்த செலவு, குறைந்த தண்ணீர் செலவு என்று எள் சாகுபடியில் அமோகமான வருமானம் பெறலாம். அதற்கு கீழ்கண்ட தொழில்நுட்பங்களை மேற்கொள்ளணும்.

தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிகாட்டில் தற்போது விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். காலையில் பனியும், மதியம் அதிக வெயிலும் என்று மாறி, மாறி இருக்கிறது. இதனால் எள் செடிகள் வாடி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பம்ப் செட்டில் ஹோஸ் பைப் இணைத்து எள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். எள் பயிருக்கு தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கக்கூடாது என்பதால் இவ்வாறு விவசாயிகள் சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

இந்நிலையில் எள் பயிர் சாகுபடியில் உள்ள தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை அளித்துள்ளது. எள் பயிர் இறவை பட்டத்தில் அதிக மகசூல் கொடுப்பதால் இறவை எள் சாகுபடி செய்வது சிறந்தது. இதற்கு அதிக நீர் தேவையில்லை. மேலும் இப்பயிர் அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்டது. இறவை பட்டம்: மாசி, பங்குனி மற்றும் சித்திரை, ரகங்கள்: டி எம் வி 3, 4,6, 7 விஆர்ஐ 2, எஸ்விபிஆர் 1

ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ விதையை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். இடைவெளி 30 சென்டிமீட்டருக்கு 30 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 11 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பெண்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியுடன் இரண்டு பாக்கெட் இதர பயிர்கள் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும், இதன் மூலம் விதை வழியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். அசோஸ்பைரில்லம் இடுவதன் மூலம் தழைச்சத்து இடுவதை குறைத்துக் கொள்ள முடியும்.

பாசன வசதி உள்ள இடங்களில் ஏக்கருக்கு இரண்டு கிலோ மாங்கனீசு சல்பேட், 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். ரசாயன உரங்கள் மானாவாரி நிலமாக இருந்தால் ஏக்கருக்கு யூரியா 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 30 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடவேண்டும்.

இறவை பாசனத்தில் தொழில்நுட்பம்

இறவை பாசனமாக இருந்தால் யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ இட வேண்டும். நெல் பயிருடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்வது களைகள். இவைகள் சத்துக்களை எடுத்துக் கொண்டு எள் பயிரின் மகசூலை பெரிதும் பாதிக்கிறது. இவற்றில் நாய் கடுகு, சாரனை, பூண்டு ஆகியவை எள் சாகுபடி செய்யும் நிலத்தில் பெரிதளவில் முளைக்கிறது. இவ்வகை களைகளை எள் விதைத்த 40 நாட்கள் வரை கட்டுப்படுத்தினாலே பயிரின் மகசூலை அதிகரிக்க முடியும்.

எள் விதைத்த மூன்றாம் நாள் மண்ணில் ஈரம் இருக்கும் தருணத்தில் அலக்குலோர் ஏக்கருக்கு 500 மில்லி அளவில் மணலில் கலந்து இடவேண்டும் அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். பயிர் கலைதல் என்பது எள் சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பமாகும். எள் விதைத்த 15 நாட்கள் கழித்து செடிக்கு செடி 15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறும், பின் பத்து நாட்கள் கழித்து செடிக்கு செடி 30 சென்டிமீட்டர் இருக்கும் படியும் பயிர்களை கலைத்து இடவேண்டும் பயிர்களை கலைத்து விடுவதால் செடிகள் நன்கு வளரும். செடிகளின் கிளைகள் அதிகரிக்கும்.. செடிகளுக்கு காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் அதிகமாக கிடைக்கும். இதனால் செடிகளில் பூக்களும், காய்களும் கிளைகளின் அடிபாகத்தில் இருந்தே தோன்றுகிறது இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.

நீர் பாய்ச்சும் முறை

எள்செடி ஐந்து இலை விடும்போது நீர் பாய்ச்சுவதும் பிறகு பூவும் காயும் தோன்றும் போது நீர் பாய்ச்சுவதும் போதுமானது. மேலும் மண்ணின் ஈரத்தன்மையை அறிந்து நீர் பாய்ச்சுவதும் சிறந்தது. எள் செடி பூக்காத குறையை நிவர்த்தி செய்ய எள் விதைத்த நாற்பதாம் நாள் பியானோ பிக்ஸ் 40 பி பி எம் 150 மில்லி ஏக்கருக்கு மற்றும் டிஏபி ஒரு சத கரைசலையும் சேர்த்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். எள் செடிகளில் காய் நாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் மற்றும் விதையின் தரம் பாதிக்கப்படுகிறது இதனை கட்டுப்படுத்த காய் பிடிக்கும் முதிரும் தருணத்தில் சேதம் அதிகம் இருப்பின் டை குளோர் வாஸ் மருந்து ஏக்கருக்கு 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். சாம்பல் நோயை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் ஒரு கிலோ வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget