மேலும் அறிய

2.85 லட்சம் டன் பருத்தி கொள்முதல்... யார் சொல்லியிருக்காங்க தெரியுங்களா?

தென்னூர் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் கடந்த மாதம் 18ம் தேதி  முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 4 ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 770 டன் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டில் 4 ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் தென்னூர் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் கடந்த மாதம் 18ம் தேதி  முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய பருத்தியினை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடைகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தற்போது தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நடைபெறும் பருத்தி மறைமுக ஏலத்தில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில வணிகர்கள் அதிகளவில் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதால் போட்டி மூலம் அதிக விலை கிடைக்கிறது.

வணிகர்களால் கொள்முதல் செய்யப்படும் பருத்திக்குரிய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 770 டன் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு 1392 எண்ணிக்கையிலான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தரத்தின் அடிப்படையில் பருத்திக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதால் பருத்தியின் தரம் மற்றும் ஈரப்பதம் 8 சதவீ தம் முதல் 12 சதவீதத்திற்குள் இருக்கும்பட்சத்தில், அவற்றிற்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் விவசாயிகள் தங்களுடைய பருத்தியினை பின்வரும் வழிமுறை களை பின்பற்றி உரிய தரத்துடன் மேற்காணும் விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து அதிகபட்சவிலை பெற்று பயனடையலாம்.

வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியினை, விவசாயிகள் அதிகாலை நேரத்தில் செடிகளில் இருந்து பறித்து நிழலில் நன்கு உலர்த்தி அதில் கலந்துள்ள இலை சருகுகள், கொட்டுப் பருத்திகள் போன்ற பொருட்களை நீக்கி விட்டு தரத்தின் அடிப்படையில் தனித்தனியே பிரித்து, சாக்குகளில் நிரப்பி ஏல விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். பருத்தி விளைப்பொருளினை நன்கு உலர்த்தி 8ல் இருந்து 12 சதவீதம் ஈரப்பத்திற்குள் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோபுராஜபுரம் ராஜகிரி பண்டாரவாடை ரெகுநாதபுரம் சரபோஜி ராஜபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கோடை பயராக பருத்தி அதிகளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல் உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி பயிர் செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள், பருத்தி சாகுபடிக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சில விவசாயிகள், நெல்லுக்கு மாற்றாக பருத்தி சாகுபடியில் இறங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்க நல்ல விலை கிடைத்து வருவதால் தற்போது அதிக விவசாயிகள் இந்த சாகுபடியை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விலையும் கட்டுப்படியாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: சதி வலை விரிக்கும் பாஜக.. தப்புக் கணக்கு போடும் அதிமுக - முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்
CM MK Stalin: சதி வலை விரிக்கும் பாஜக.. தப்புக் கணக்கு போடும் அதிமுக - முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்
Puducherry School Colleges Holiday : மோன்தா புயல் எதிரொலி ; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!
Puducherry School Colleges Holiday : மோன்தா புயல் எதிரொலி ; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!
AP Bus Fire: எரிந்து கருகிய 20 உயிர்கள்.. காரணமான பேட்டரிகள், ஸ்மார்ட்போன்கள் - கோர விபத்தின் திடுக்கிடும் தகவல்
AP Bus Fire: எரிந்து கருகிய 20 உயிர்கள்.. காரணமான பேட்டரிகள், ஸ்மார்ட்போன்கள் - கோர விபத்தின் திடுக்கிடும் தகவல்
Montha cyclone: இன்றே உருவாகிறது மோன்தா புயல்.. அடித்து வெளுக்கப்போது மழை - இவ்ளோ ஸ்பீடு தாங்காது!
Montha cyclone: இன்றே உருவாகிறது மோன்தா புயல்.. அடித்து வெளுக்கப்போது மழை - இவ்ளோ ஸ்பீடு தாங்காது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அடையாறில் ஸ்டாலின் ஆய்வு களத்தில் இறங்கிய உதயநிதி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு | Stalin Inspection
பனையூருக்கு வரும் 41 குடும்பங்கள்
வலுப்பெறும் மோந்தா புயல் சென்னையை நெருங்குகிறதா?இனி தான் இருக்கு கச்சேரி | Weather Report | Montha Cyclone
ராமதாஸ் அன்புமணி மோதல் பின்னணியில் 2 பெண்கள்! போட்டுடைத்த பாமகவினர் | Ramadoss vs Anbumani
Salem Bridge Phone Theft : ’’சிறுமிக்கு ஆபாச MESSAGE’’சேலம் வழிப்பறி சம்பவம் உண்மை பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: சதி வலை விரிக்கும் பாஜக.. தப்புக் கணக்கு போடும் அதிமுக - முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்
CM MK Stalin: சதி வலை விரிக்கும் பாஜக.. தப்புக் கணக்கு போடும் அதிமுக - முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்
Puducherry School Colleges Holiday : மோன்தா புயல் எதிரொலி ; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!
Puducherry School Colleges Holiday : மோன்தா புயல் எதிரொலி ; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!
AP Bus Fire: எரிந்து கருகிய 20 உயிர்கள்.. காரணமான பேட்டரிகள், ஸ்மார்ட்போன்கள் - கோர விபத்தின் திடுக்கிடும் தகவல்
AP Bus Fire: எரிந்து கருகிய 20 உயிர்கள்.. காரணமான பேட்டரிகள், ஸ்மார்ட்போன்கள் - கோர விபத்தின் திடுக்கிடும் தகவல்
Montha cyclone: இன்றே உருவாகிறது மோன்தா புயல்.. அடித்து வெளுக்கப்போது மழை - இவ்ளோ ஸ்பீடு தாங்காது!
Montha cyclone: இன்றே உருவாகிறது மோன்தா புயல்.. அடித்து வெளுக்கப்போது மழை - இவ்ளோ ஸ்பீடு தாங்காது!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
AP Bus Fire: தீயில் கருகிய 20 உயிர்கள்.. கடைசி வரை காப்பாற்ற போராடிய ஓட்டுனர்கள் - பேருந்து விபத்தில் நடந்தது என்ன?
AP Bus Fire: தீயில் கருகிய 20 உயிர்கள்.. கடைசி வரை காப்பாற்ற போராடிய ஓட்டுனர்கள் - பேருந்து விபத்தில் நடந்தது என்ன?
TVK Vijay: சென்னை வரும் 41 குடும்பங்கள்.. கடைசி வரை கரூர் போமாட்டாரா விஜய்? பனையூர் பண்ணையார்தான் போல!
TVK Vijay: சென்னை வரும் 41 குடும்பங்கள்.. கடைசி வரை கரூர் போமாட்டாரா விஜய்? பனையூர் பண்ணையார்தான் போல!
மோந்தா புயல்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆரஞ்சு அலர்ட்!
மோந்தா புயல்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget