மேலும் அறிய

Young Nattamai : 427 மலை கிராமங்களுக்கு.. தீர்ப்பளிக்கும் 9 வயது சிறுவன்..! Tiruvannamalai | Tribe people |

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது.திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் இதில் ஜவ்வாது மலையில் 427 மலை கிராமங்கள் 36 கிராமங்களாக ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மலை கிராமங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு நாட்டாமை, ஒரு ஊர் கவுண்டர், மூப்பன் ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள்தான் கிராமத்தில் ஏற்படும் சொத்து தகராறு குடும்பத்தகராறு மற்றும் திருமணங்கள் உள்ளிட்டவைகளை பேசி சுமூகமாக தீர்வு செய்யப்படுவார்கள்.

மலைவாழ் மக்களிடையே திருமணம் என்றால் மலையில் உள்ள 427 மலை கிராமங்களில் உள்ள மக்களும் திருமணம் என்பது தலைமை நாட்டாமை , முன்னாள் மணமகன் மணமகள் குறித்து இனம் மற்றும் வயது அவர்களது பூர்வீகம் குறித்து விசாரித்த பின்னரே தலைமை நாட்டாமை முன்னிலையில் அவர் கைகளால் தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடைபெறுவது வழக்கம். திருமணத்திற்கு முன்பு மனமகனை நிச்சயம் செய்த பெண் வீட்டிற்கு 10 நாட்கள் வரை சென்று வரவேண்டும் அதனைத்தொடர்ந்து ஊர் திருவிழா என்றால் தலைமை நாட்டாமை தான் முடிவு செய்ய வேண்டும். மலைவாழ் கிராமங்களில் நாட்டாமை உத்தரவுபடி தான் கிராம மக்கள் நடந்து கொள்வார்கள். இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு இடையே ஏற்படும் குடும்ப தகராறு சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தலைமை நாட்டாமை முன்னிலையில் தான் ஊர் நாட்டாமைகள் பேசி சுமூகமாக தீர்த்து வைப்பார்கள். ஜவ்வாது மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையில் நாட்டாமை மற்றும் தலைமை நாட்டாமை என்பது ஒரு முக்கிய பொறுப்பாகும். அவரின் உத்தரவுப்படியே மலைவாழ் மக்கள் அனைவரும் செயல்படுவார்கள். ஜவ்வாது மலையிலுள்ள மலை கிராமங்களில் தலைமை நாட்டாமையாக மல்லிமடு கிராமத்தை சேர்ந்த 87 வயதான சின்னாண்டி என்பவர் கடந்த 80 ஆண்டுகாலமாக இந்த பதவியை வகித்து வந்தார்.

கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பாக உடல் சரியில்லாமல் தலைமை நாட்டாமை இறந்துவிட்டார். அதனைத்தொடர்ந்து சென்ற 1 ஆண்டு காலமாக தலைமை நாட்டாமை பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த 36 ஊர் நாட்டாமைகள் 36 ஊர் கவுண்டர்கள் 36 மூப்பன்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மலைவாழ் மக்களின் தெய்வ நம்பிக்கையின் படி இறந்துபோன சின்னாண்டியிடம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு செய்தும் அடுத்த தலைமை நாட்டாமை யாரென்று தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தலைமை நாட்டாமையான சின்னாண்டிக்கு முத்துசாமி, வெள்ளை கண்ணன், பெருமாள் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட வாரிசுகள் உள்ளனர் இதில் சக்திவேல் உள்ளிட்ட ஆண் பெண் என 21 பேரக்குழந்தைகளும் உள்ளனர். மலைவாழ் மக்களின் தெய்வ நம்பிக்கை படி தெய்வ வாக்கு படி சின்னாண்டி இரண்டாவது மகன் முத்துசாமியின் 9 வயதான பேரன் சக்திவேல் அடுத்த தலைமை நாட்டாமை ஆக நியமிக்க வேண்டும் என தெய்வ வாக்கு கூறியதால் அதனை ஏற்ற ஊர் கவுண்டர்கள், ஊர் நாட்டாமைகள் , ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இறந்துபோன நாட்டாமையின் வாக்குபடி ஊர் நாட்டாமைகள் ஊர் கவுண்டர்கள் மூப்பன்கள் இணைந்து சின்னாண்டியி‌ன் பேரக்குழந்தையான 9 வயது சக்திவேலை மலை கிராமங்களின் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து 3 மாவட்டங்களைச் சேர்ந்த மலை கிராம மக்களின் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்த சக்திவேலின் சொந்த ஊரான மல்லிமடு கிராமத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. ஜவ்வாது மலை உட்பட்ட திருவண்ணாமலை, வேலூர் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள், மூப்பன்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து மலைவாழ் மக்கள் வழக்கம்படி 9 வயது சக்திவேலுக்கு பட்டம் சூட்டி மலைவாழ் மக்களின் தலைமை நாட்டானாக தேர்வு செய்து செங்கோல் அளித்தனர். தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்ட சக்திவேல் நாகலூர் கிராமத்திலுள்ள ஊராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருவது வருகிறார் இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில் ஜவ்வாதுமலை கலாச்சாரத்தை பொறுத்தவரையில் நாட்டாமையின் சொல்படிதான் கிராமமக்கள் செயல்படுவார்கள் அதேபோல மலைவாழ் மக்கள் அனைவரும் கிராமங்கள்தோறும் ஊர் கவுண்டர் நாட்டாமை, மூப்பன் போன்ற மூன்று நபர்களின் கட்டுப்பட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்துகொள்வார்கள் என்றும் மலை கிராமங்களில் உள்ள ஊர் கவுண்டர், ஊர் நாட்டாமை ,மூப்பன் உள்ளிட்டவர்கள் தலைமை நாட்டாமையின் தீர்ப்புக்கு அடிபணிந்து செயல்படுவார்கள். ஆகவே ஒன்பது வயது சிறுவன் ஆனாலும் அவன் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து தான் மலை கிராம மக்கள் செயல்படுவோம் என்றும் உறுதி அளித்தனர். மேலும் சிறுவனுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுவனுக்கு சரியான வயது இல்லை அதுவரை அவரது தந்தை பார்த்துக்கொள்வார்கள், தானாகவே பல்வேறு பிரச்சினைகளை தீர்வு செய்து முடிவு எடுக்கும் அளவிற்கு அவருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget