மேலும் அறிய

டம்மியான செங்கோட்டையன்? ப்ளானை தவிடுபொடியாக்கிய EPS! கொங்கு நிலவரம் என்ன?

காலக்கெடு விதித்து அதிரடி காட்டலாம் என கணக்கு போட்ட செங்கோட்டையனை இபிஎஸ் கண்டு கொள்ளததால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று, இதற்கு சும்மாவே இருந்திருக்கலாம் என செங்கோட்டையன் நொந்து போய் இருப்பதாக சொல்கின்றனர். PRESSMEET-க்கு பிறகு கொங்கு வட்டாரத்திலேயே செங்கோட்டையனுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, தினகரன், ஒபிஎஸ்-ஐ  மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த மனநிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம் என கடந்த செப்டம்பர் 5ம் தேதி PRESSMEET வைத்து காலக்கெடு விதித்தார். 

அவர் சொன்ன 10 நாட்கள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்த செங்கோட்டையனிடம் காலக்கெடு பற்றி கேள்வி கேட்ட போது, என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். இதுதான் எனது ஆசை. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” சாஃப்ட்டாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.

காலக்கெடு விதித்த பிறகு இபிஎஸ் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்த்த செங்கோட்டையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனின் பதவியை பறித்தார் இபிஎஸ். கழக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டார். அதேபோல் செங்கோட்டையனுக்கு நினைத்த அளவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. கட்சியின் முக்கிய புள்ளிகளே இபிஎஸ் பக்கம் நின்றதால் செங்கோட்டையன் தனித்து விடப்பட்டார். 

கொங்கு மண்டலத்திலேயே செங்கோட்டையனுக்கு செல்வாக்கு இல்லாமல் போனது. கோபிசெட்டிபாளையத்தை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள்  யாரும் செங்கோட்டையனை சந்திக்க கூட வரவில்லை என சொல்கின்றனர். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்கள் தான் செங்கோட்டையனுக்கு பக்கபலமாக நின்றனர். அதனால் அவர்கள்தான் அடுத்தடுத்து செங்கோட்டையனை சந்திக்க வந்ததாகவும், வேறு யாரும் அந்த பக்கமே வரவில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது. 

செங்கோட்டையன் வகித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை எம் எல் ஏ ஏ.கே.செல்வராஜிடம் ஒப்படைத்தார் இபிஎஸ். அதன்பிறகு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அவரது பக்கம் திடீர் பல்டி அடிக்க ஆரம்பித்தனர். கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் செல்வராஜை நேரில் சந்தித்து பேசினர். செங்கோட்டையனின் ஆதரவாளர் என கூறப்படும் பவானிசாகர் தொகுதி எம்.எல்.எ. பண்ணாரியும் செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் எப்போதும் இபிஎஸ் பக்கம் தான் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.

இப்படு ஈரோடு அதிமுக வட்டாரத்திலேயே நிலைமை செங்கோட்டையனின் கைகளை மீறி சென்றுள்ளது. செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட இன்னும் சில நாட்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அந்தப் பக்கம் சாய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. காலக்கெடு விதித்து பலத்தை காட்டலாம், இபிஎஸ்-ஐ வழிக்கு கொண்டு வரலாம் என நினைத்த செங்கோட்டையனின் ப்ளான் தலைகீழாக மாறி அவருக்கே நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HOLIDAY: ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
Embed widget