மேலும் அறிய

மிரட்டி சாதித்த நிதிஷ்! பாஜக ப்ளான் FLOP! அடுத்த முதல்வர் யார்?

மகாராஷ்டிராவில் கடைசி நேரத்தில் ஏக்நாத் ஷிண்டேவை ஏமாற்றி CM பதவியை வசமாக்கிய பாஜகவின் ஐடியா நிதிஷ் குமாரிடம் துளி கூட எடுபடவில்லை. பாஜக தலைமைக்கு பயத்தை கொடுக்கும் சில எச்சரிக்கைகளை கொடுத்து CM பதவியை நிதிஷ்குமார் வசமாக்கியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை தட்டிச் சென்று அபார வெற்றி வெற்றது. இந்த கூட்டணியில் உள்ள பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சி 19 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.

என்ன ஆனாலும் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் நிதிஷ் குமார் உறுதியாக இருந்தார். 2005ம் ஆண்டில் இருந்து பீகாரின் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார் அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை. எத்தனை கூட்டணி மாறினாலும் சிஎம் இருக்கையில் அவரை தவிர யாரும் இருக்கக் கூடாது என்பதுதான் அவருடைய டார்கெட். அதே நேரத்தில் பாஜக, அதிக தொகுதிகளை கைப்பற்றிவிட்டால் CM பதவியை கைப்பற்றிவிடலாம் என கணக்கு போட்டது. மகாராஷ்டிர தேர்தலின் போது ஆரம்பத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த பாஜக, தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றியதும் ஏக்நாத் ஷிண்டேவை ஓரங்கட்டி CM பதவியை வாங்கி கொண்டது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த நிலையில், துணை முதலமைச்சர் பதவிக்கு இறங்கினார் ஏக்நாத் ஷிண்டே.

ஆனால் பாஜகவின் இந்த வேலை நிதிஷ்குமாரிடம் எடுபடவில்லை. இறுதியில் நிதிஷ் குமார் தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியை பறிக்க பாஜக முயற்சித்த போது நிதிஷ் குமார் பாஜக தலைமைக்கே மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சொல்கின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் நிதிஷ் குமார் உதவியுடன் தான் ஆட்சி அமைத்துள்ளது. நிதிஷ் குமார் பின்வாங்கிவிட்டால் மத்தியில் பாஜக ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் பயம் காட்டியதாக சொல்கின்றனர்.

அதேபோல் கூட்டணி மாறுவதற்கு தயங்காத நிதிஷ் குமார் அதனை வைத்து பாஜகவுடன் டீலிங்கை முடித்ததாக தெரிகிறது. முதலமைச்சர் பதவி தரவில்லை என்றால் பாஜகவை கழற்றிவிட்டு இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமா என்ற பேச்சும் இருந்ததாக சொல்கின்றனர். இந்த கூட்டணியை தவிர்த்து பார்க்கும் போது ராஷ்டிரிய ஜனதா தளம் 25 தொகுதிகளையும், காங்கிரஸ் 6 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூஸ்னிட் 2 தொகுதிகளையும், சிபிஐ, ஐஐபி கட்சிகள் தலா ஒரு தொகுதியையும், அசாதுதீன் ஓவைசியின் AIMIM 5 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியையும் வைத்துள்ளன. இந்த கட்சிகளுடன் நிதிஷ் குமார் கைகோர்த்தால் மொத்தமாக 124 தொகுதிகள் வந்துவிடும். ஆட்சியமைக்க பெரும்பான்மை 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் நிதிஷ் குமார் பாஜகவை கழற்றிவிட்டு இந்த கூட்டணியில் இணைந்தாலும் எளிதில் ஆட்சியமைத்துவிடும். நிதிஷ் அதிக தொகுதிகள் வைத்திருப்பதால் முதலமைச்சர் பதவியும் அவருக்கே வந்துவிடும். நிதிஷ் போய்விட்டால் பாஜக கூட்டணியிடம் 117 இடங்கள் மட்டுமே இருக்கும் என்பதால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்த கணக்குகளை எல்லாம் காட்டி தான் நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவி டீலிங்கை முடித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. கூட்டணி தாவி ஆட்சியை கவிழ்ப்பது நிதிஷ் குமாருக்கு புதிது கிடையாது என்பதால் பாஜகவுக்கும் அவர் மீது பயம் இருந்துள்ளது. அதனால் பீகாருக்குள் காங்கிரஸ் கூட்டணிக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என கணக்கு போட்டு நிதிஷ் குமாருக்கே முதலமைச்சர் பதவியை கொடுக்க பாஜக தலைமை இறங்கி வந்துள்ளதாக சொல்கின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
“அம்மாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்” – பெரியகுளத்தில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
“அம்மாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்” – பெரியகுளத்தில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
திருச்செந்தூர் கோயில் கடற்கரை கடல் அரிப்பு தடுப்புப் பணி.. அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும் !
திருச்செந்தூர் கோயில் கடற்கரை கடல் அரிப்பு தடுப்புப் பணி.. அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும் !
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக மனு.. 50 ஆயிரம்  அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை !
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக மனு.. 50 ஆயிரம்  அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை !

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Hormuz Toll Tax: கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Abbas Araghchi Vs Netanyahu: அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget