Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP"வெளியே போங்க" நேருக்கு நேர் மோதல் | Viral Video
ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் கைத்தல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP உபாசனாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டபோது, தனக்கு அதற்கு அதிகாரம் இல்லை என்று எஸ்பி கூறியது மோதலை உருவாக்கியது.
கைத்தல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் மாலிக் என்பவர், நிலம் வாங்கிய விவகாரத்தில் சந்தீப் என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் (ASI) தன்னை ஏமாற்றிவிட்டதாக அமைச்சரிடம் புகார் அளித்தார். அந்த வழக்கு வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புகாரை விசாரித்த அமைச்சர் அனில் விஜ், அந்த ஏஎஸ்ஐ விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உடனடியாக உத்தரவிட்டார். "அவர் பணியில் இருந்தால் விசாரணையில் செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளது, எனவே அவரை சஸ்பெண்ட் செய்யுங்கள்" என்று எஸ்பி உபாசனாவிடம் கூறினார்.
இதற்கு பதிலளித்த எஸ்பி உபாசனா, "ஐயா, அந்த அதிகாரி தற்போது குருக்ஷேத்ரா மாவட்டத்தில் பணியில் உள்ளார். அவர் என் அதிகார வரம்பிற்குள் வரவில்லை, எனவே அவரை இடைநீக்கம் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. குருக்ஷேத்ரா எஸ்பி அல்லது டிஜிபி மட்டுமே அதைச் செய்ய முடியும்" என்று விளக்கமளித்தார்.
எஸ்பி-யின் பதிலால் ஆத்திரமடைந்த அமைச்சர் அனில் விஜ், "உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் இங்கிருந்து வெளியேறுங்கள். நான் உத்தரவிடுகிறேன், நீங்கள் அதை செயல்படுத்த வேண்டும். மாநில டிஜிபி-க்கு கடிதம் எழுதுங்கள். அனில் விஜ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று அதில் குறிப்பிடுங்கள்" என ஆவேசமாகக் கத்தினார்.
கூட்டத்தில் அமைச்சரின் அதிகாரத்தை எஸ்பி கேள்வி எழுப்பியபோது, விஜ் தன்னிச்சையாக, "என்னுடைய உத்தரவு ஹரியானா மாநிலம் முழுவதும் செல்லும்” என்று கூறினார். இதைக் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வாக்குவாதம் முற்றுவதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் அபராஜிதா தலையிட்டு சமரசம் செய்தார். இறுதியில், எஸ்பி உபாசனா அமைச்சரின் உத்தரவை டிஜிபி-க்கு பரிந்துரையாக அனுப்ப ஒப்புக்கொண்டார்.
'
ட்ரெண்டிங் செய்திகள்






















