Edappadi Palanisamy: OPERATION செந்தில் பாலாஜி ஆட்டத்தை ஆரம்பித்த EPS ஆதவ் MASTERMIND
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக இந்த பயணத்தை ஜனவரி 31 ஆம் தேதி கோவையில் தொடங்க உள்ளார். தமிழ்நாட்டில் அத்தனை இடங்கள் இருந்தும் இபிஎஸ் கோவையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற தகவலை இந்த வீடியோவில் பார்ப்போம்.
இன்றைய தமிழக முதல்வரும், அன்றைய திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2015 ஆம் ஆண்டு நமக்கு நாமே என்ற நடைபயணத்தை, தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொண்டார். அதே பாணியை தற்போது கையில் எடுத்திருக்கிறார் எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் எப்போதும் இருமுனை போட்டியாக இருக்கும் தேர்தல் களம் இந்த முறை பலமுனை போட்டியாக மாறியிருக்கிறது. திமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவிடக்கூடாது என்று அதிமுக முனைப்பு காட்டி வரும் அதேவேளையில், மறுபுறம் நாம் தமிழர், பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்க இருக்கும் இந்த சூழலில் தான் இபிஎஸ் தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களின் குறையை கேட்க இருக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே கோவையில் இருந்து தான் இந்த பயணம் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியானாலும், ஏன் என்ற காரணம் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொங்கு மண்டலமாக அறியப்படக்கூடிய கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய பத்து மாவட்டங்களிலும் மாவட்டங்களிலும் அதிமுகவின் கைதான் ஓங்கி இருந்தது. அதே நேரம் 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி திமுக வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே கொங்கு மண்டலத்தை முழுமையாக கைப்பற்றியது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கைகள் ஓங்கி இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கோவையில் தோல்வி அடைந்தது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு பின்புலமாக இருந்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்தை பிடித்தார். அதிமுக வேட்பாளராக 3 ஆம் இடத்தையே பிடித்தார். இதனால் கடும் அப்செட் ஆனார் இபிஎஸ். அப்போதிலிருந்தே கோவையை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இபிஎஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
இச்சூழலில் தான் திமுக, பாஜக என்பதை எல்லாம் உடைத்து வரும் சட்டமன்ற தேர்ததில் தமிழகம் மட்டும் அல்ல கோவையும் அதிமுகவின் கோட்டைதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று இபிஎஸ் விரும்புவதால் கோவையில் ஜனவரி 31 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். அதேபோல், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட வாய்ஸ் ஆப் காமன் நிறுவனர் ஆதவ் அர்ஜூனா இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் அவரின் ஐடியா தான் இந்த சுற்றுப்பயணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















