மேலும் அறிய

Durai Vaiko Resign | தூக்கியெறிந்த துரைவைகோவிழிபிதுங்கி நிற்கும் வைகோ மதிமுகவில் கோஷ்டி பூசல் | Vaiko | MDMK

மகன் முக்கியமா இல்லை மல்லை சத்யாவா என்ற குழப்பத்தில் திணறிக் கொண்டிருக்கிறார் வைகோ. துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையில் இருந்த பிரச்னை வெளிப்படையாகவே வெடித்து மதிமுகவில் பூகம்பத்தை கிளப்பியது. இந்தநிலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் 
பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் முதன்மை செயலாளர் பதவி கொடுத்ததில் இருந்து மல்லை சத்யாவை ஓரங்கட்டி வருவதாக பேச்சு இருக்கிறது. மற்றொரு பக்கம் கட்சியில் சாதி பார்த்து தான் பதவி கொடுப்பதாக மல்லை சத்யா ஆதரவாளர்கள்_ துரை வைகோவை டார்கெட் செய்து வந்துள்ளனர்.  

அதனை தொடர்ந்து சென்னை தாயகத்தில் வைகோ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 2 தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. நிர்வாகிகளை நியமிப்பதில் சாதி பாகுபாடு பார்ப்பதாக சிலர் குற்றம்சாட்டியதால் துரை வைகோ கோபத்தில் கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார். இந்தநிலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் 
பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்............


அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ அவர்கள் வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன். இந்த சூழ்நிலையில் தான் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் தலைவர் உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். என் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை 
செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தலைவர் மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது. இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் இயக்கத் தந்தை வைகோ அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை  தலைவருக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக என் தந்தை வைகோ அவர்கள் பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மறுமலர்ச்சி திமுகவை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி 
தமிழ்நாட்டில்  திமுகவை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் மதிமுக குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது. மதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் இயக்கத் தந்தை வைகோ அவர்களை அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த போது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர். கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த தலைவர் நிர்வாக  குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கழகத்தில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோ அவர்களுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்றத் தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும்  , அதைவிட மேலாக கூட்டணி தலைமையும்  விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன்...

அரசியல் வீடியோக்கள்

Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bengaluru Power Cut : பெங்களூருவில் 9 மணி நேர மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? முழு விவரம்
Bengaluru Power Cut : பெங்களூருவில் 9 மணி நேர மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? முழு விவரம்
Strait of Hormuz: எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
AIADMK Election Manifesto: அதிமுக-வின்
AIADMK Election Manifesto: அதிமுக-வின் "மெகா" தேர்தல் அறிக்கை: தமிழ்நாட்டை மாற்றப்போகும் 22 அதிரடி உட்கட்டமைப்பு வாக்குறுதிகள்!
மழையில் தப்பி நெற்பயிர்கள், அதிகாரிகளால் பாழாகும் அவலம்... தீடீரென மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை...
மழையில் தப்பி நெற்பயிர்கள், அதிகாரிகளால் பாழாகும் அவலம்... தீடீரென மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை...
ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
Strait of Hormuz: எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
GOLD SILVER RATE Mar. 24th: இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
Honda City Facelift: மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?
மக்களின் ப்ரியமான கார்; புதுப் பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்; எப்போ அறிமுகம்.?
Israel Iran War Netanyahu: “அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
“அவர் என்ன நிறுத்துறது, நான் சொல்றேன்.. போர் தொடரும்“; நெதன்யாகு அறிவிப்பால் எகிறிய பதற்றம்
IRCTC New Refund Rules: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் ரத்து, ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்!
IRCTC New Refund Rules: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் ரத்து, ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்!
Embed widget