Annamalai on Amit Shah | "எனக்கு பதவியே வேணாம்"ஆத்திரத்தில் அண்ணாமலை அமித்ஷாவிடன் போட்ட கண்டிஷன்
அதிமுகவோட கூட்டணியே வைக்கக் கூடாது, அப்படியே வச்சாலும் இபிஎஸ்-ஐ முதலமைச்சர் வேட்பாளர் ஆக்க கூடாது, இல்லனா நான் மாநில தலைவர் பதவியவே தூக்கி எறிய தயார் என பாஜக தலைமையிடம் அண்ணாமலை முரண்டு பிடித்து வருவதாக சொல்கின்றனர்.
அதிமுக- பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இடையே டெல்லியில் நடந்த சந்திப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதுவும் முதல்வர் வேட்பாளர் நான் தான், ஓபிஎஸ், டிடிவியுடன் மீண்டும் சேர மாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டு இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அண்ணாமலை எங்கள் கட்சியினரை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கறாராக சொன்னார் இபிஎஸ்,
இபிஎஸ் டெல்லியில் இருந்து கிளம்பிய அடுத்த நாளே அண்ணாமலையை டெல்லிக்கு வரவழைத்தார் அமித்ஷா. அவரை நேரில் வைத்து இந்த கூட்டணி அமைந்தே ஆக வேண்டும், அதிமுகவினரை எதுவும் சொல்லக் கூடாது, இபிஎஸ் சொல்வதை கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுள்ளார் அமித்ஷா. அதேபோல் மீட்டிற்கு முன்னால் என்னிடம் எதுவுமே கேட்கவே இல்லையே தனது தரப்பையும் சொல்லி புலம்பியுள்ளார் அண்ணாமலை.
இந்தநிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் அண்ணாமலைக்கு விருப்பமே இல்லை என்றும், அதனை அமித்ஷாவிடமே நேரடியாக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியே கூட்டணி வைத்தாலும் முதலமைச்சர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ நிறுத்தக் கூடாது, இல்லையென்றால் நான் தலைவர் பதவியையே ராஜினாமா செய்து கொள்கிறேன் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதாக தெரிகிறது. இருந்தாலும் அதிமுக கூட்டணி அமைந்தே ஆக வேண்டும் என அமித்ஷா விடாப்பிடியாக இருப்பதால் அண்ணாமலை அப்செட் ஆகியுள்ளதாக சொல்கின்றனர்.
சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த அண்ணாமலையும் கட்சி நலனை விட தமிழக மக்களின் நலனே முக்கியம், எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சிதான் முதன்மையானது என சொல்லி ஹிண்ட் கொடுத்தார்.
அதேபோல் கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, எந்த ஒரு தலைவர் மீதோ, கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லி இருக்கிறேன். அதன் பொருளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு பதவியின் மீது ஆசை இல்லை” என தெரிவித்தார். இதன்மூலம் பதவியை ராஜினாமா செய்ய கூட நான் தயார் என்ற மறைமுக மெசேஜை டெல்லி தலைமைக்கு அண்ணாமலை மீண்டும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு திருப்திகரமாக இல்லை என்பதையே அண்ணாமலையின் பேச்சுகள் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.





















