”பாலியல் தொல்லை கொடுக்குறாங்க! இவங்களானு ஷாக் ஆயிட்டேன்” வேதனைப்பட்ட ஜோனிடா காந்தி Singer Jonita Gandhi
பிரபல பின்னணி பாடகி பல பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்த இளம் பாடகியாக இருக்கும் ஜோனிடா காந்தி தனக்கு பாலியல் ரீதியாக பலர் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓ காதல் கண்மணி படத்தில் இவர் பாடிய மெண்டல் மனதில் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜோனிடா காந்தி பல பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவர் அனிருத் இசையில் வேலைக்காரன், டாக்டர், டான் போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி ரசிகர்களின் மனதை ஈர்த்தது. இந்நிலையில், விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் walking talking strawberry ice cream என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ஜோனிடா காந்தி அறிமுகமாகிறார்.
இசையில் பாடுவது கனவு போல் இருந்ததாக தெரிவித்திருந்தார். அதேபோன்று சமீபத்தில் ஜோனிடா காந்தி அளித்த பேட்டி ஒன்றில் தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை இன்ஸ்டாகிராமில் என் நண்பர்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஸ்டோரியைக் கண்டேன். அதில் ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து, அதன் பின்னணியில் என் புகைப்படத்தை வைத்திருந்தார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதுமாதிரியான அசிங்கம் பிடி்தத நபர்களை நான் பிளாக் செய்து விடுவேன். இதுபோன்ற சம்பவத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இது தொடர்பாக யார் மீதும் வழக்குத் தொடரவில்லை. ஆனால், இதுவும் ஒரு விதமான பாலியல் சீண்டல்தான். இத்தகைய சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதால், யார் மீதும் வழக்கு தொடரவில்லை. ஆனால், இவை அனைத்தும் பாலியல் சீண்டல்கள்தான். இதுபோன்று பலர் எனக்கு தினமும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என ஜோனிடா காந்தி தெரிவித்துள்ளார்.





















