மேலும் அறிய

கோலாகலமாக தொடங்கியது மூணாறு மலர்க்கண்காட்சி.. உற்சாகத்துடன் சுற்றுலா பயணிகள் பங்கேற்பு..!

கேரள மாநில அரசின் சுற்றுலாத் துறை, கடந்த 2019 ஆம் ஆண்டு மூணாறில், மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் ரூ.4.5 கோடி செலவில் புதிய தாவரவியல் பூங்கா அமைத்தது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி, கொடைக்கானல் மற்றும் கேரளாவில் உள்ள மூணாறு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர்.


கோலாகலமாக தொடங்கியது மூணாறு மலர்க்கண்காட்சி.. உற்சாகத்துடன் சுற்றுலா பயணிகள் பங்கேற்பு..!

இதில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு, இந்தியாவின் முக்கிய மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலம் தேயிலை மற்றும் ஏலத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிக அளவில் விளைகின்றன.

கோடை காலங்களில் இப்பகுதியில் நிலவும் இதமான காலநிலையால், மூணாறுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால், கேரள மாநில அரசின் சுற்றுலாத் துறை, கடந்த 2019 ஆம் ஆண்டு மூணாறில், மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் ரூ.4.5 கோடி செலவில் புதிய தாவரவியல் பூங்கா அமைத்தது.இதனால் முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தின் எல்லை பகுதியிலுள்ள தேக்கடிக்கும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.  இது, தற்போது இந்தியா முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய தலமாக மாறியுள்ளது.


கோலாகலமாக தொடங்கியது மூணாறு மலர்க்கண்காட்சி.. உற்சாகத்துடன் சுற்றுலா பயணிகள் பங்கேற்பு..!

மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று மூணாறில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக ரோஜா, ஜெரோனியா, டேலியா, ஜெரிபரா, ஐஸ்வர்யா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலர்களின் 20,000-க்கும் மேற்பட்ட செடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.


கோலாகலமாக தொடங்கியது மூணாறு மலர்க்கண்காட்சி.. உற்சாகத்துடன் சுற்றுலா பயணிகள் பங்கேற்பு..!

அத்துடன், கடந்த ஆண்டு தென் தமிழகத்தின் தேனி மாவட்ட மக்களை பயமுறுத்திய அரிக்கொம்பன் யானையை நினைவூட்டும் வகையில் அதன் உருவம் பைபர் மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தால் இயக்கப்படும் இந்த யானையின் காதுகள் மற்றும் தும்பிக்கையால் அசைவுகள் ஏற்படுவதால், சுற்றுலாப் பயணிகள் அருகில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றும் வகையில், வண்ண விளக்குகளுடன் கூடிய இசை நீர் அருவிகள், கண்ணாடி பாலங்கள், செல்பி பாயிண்ட் பகுதிகள் போன்றவை பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர, கேரளத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அரிக்கொம்பன் யானை, கதகளி நாட்டிய வடிவம், காட்டெருமை உருவம் போன்றவை இயற்கையை பிரதிபலிக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலர்கள் மற்றும் இலைகளால் உருவாக்கப்பட்ட டைனோசர் மற்றும் மர அணில் வடிவங்கள் சிறார்களையும் பெரியவர்களையும் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
Embed widget