மேலும் அறிய

மண் கடத்தி வருவதாக லாரியை சிறைப்பிடித்த ஊர் மக்கள் - கரூரில் பரபரப்பு

பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் எந்த இடத்திலும் மண் அல்ல விட மாட்டோம். மேலும், மிகப் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கடைவீதி பகுதியில் கிராவல் மண் கடத்தி வருவதாக லாரியை ஊர் பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக கிராவல் மணல் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்களால் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக கரூர், உப்பிடமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில்  சட்டத்துக்கு புறம்பாக கிராவல் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. 


மண் கடத்தி வருவதாக லாரியை சிறைப்பிடித்த ஊர் மக்கள் - கரூரில் பரபரப்பு

இந்நிலையில், இன்று உப்பிடமங்கலம் கடைவீதி பகுதியில் கிராவல் மணல் ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் லாரியை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். லாரி ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், அவர் வைத்திருந்த பர்மீட்டில் காக்காவடியில்  கிராவல் மண் அள்ளப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம் என்று அனுமதி இருந்தது. ஆனால், காக்காவடியில் கிராவல் மண் அள்ளப்படாமல், உப்பிடமங்கலம் அடுத்துள்ள மாணிக்கபுரம் என்ற கிராமத்தில் கிராவல் மண் எடுத்து வரப்படுவது தெரிய வந்தது. 


மண் கடத்தி வருவதாக லாரியை சிறைப்பிடித்த ஊர் மக்கள் - கரூரில் பரபரப்பு

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், லாரியை சிறைப்பிடித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், கிராவல் மண் அள்ளுவதற்கான பர்மிட் ரசீதை ஆய்வு செய்த பின் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மண் கடத்தி வருவதாக லாரியை சிறைப்பிடித்த ஊர் மக்கள் - கரூரில் பரபரப்பு

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இன்றி பல இடங்களில்  கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த லாரி பல மாதங்களாக காக்காவடி பகுதியில் மணல் அள்ளப்படுவதாக பர்மிட் வாங்கிக் கொண்டு, சட்ட விரோதமாக உப்பிடமங்கலம் அடுத்துள்ள மாணிக்கபுரம் என்ற இடத்தில் மண்ணை அள்ளி கொண்டு செல்கின்றனர்.


மண் கடத்தி வருவதாக லாரியை சிறைப்பிடித்த ஊர் மக்கள் - கரூரில் பரபரப்பு

மாணிக்கபுரம் பகுதியில் அதிக அளவிலான பச்சை கற்கள் புதைந்து உள்ளதாக தகவல் உள்ளது. அந்தக் கற்களை அல்லவே மேம்போக்கான பர்மிட் வாங்கிக் கொண்டு இங்கு மண்ணை எடுத்து செல்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் எந்த இடத்திலும் மண் அல்ல விட மாட்டோம். மேலும், மிகப் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget