ரயில் டிக்கெட்-ல் 3% தள்ளுபடி! ரயில் ஒன் செயலி மூலம் ஜூலை 14 வரை வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
ரயில் ஒன் செயலி மூலம் ஜூலை 14ஆம் தேதி வரை டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் பட்சத்தில் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 3 சதவீதம் தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும். இந்த அறிவிப்பை வடக்கு ரயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியன் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை ஜூலை 14ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே, ரயில் ஒன் செயலி வாயிலாக எப்படி டிக்கெட் புக் செய்யலாம் என்று பார்ப்போம்.
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, டிக்கெட் எடுப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வடக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரயில் ஒன் செயலி வாயிலாக டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்கனவே இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது, ரயில் ஒன் செயலி மூலம் ஜூலை 14ஆம் தேதி வரை டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்தது. டிஜிட்டல் பணம் செலுத்துதல், காகிதமில்லா டிக்கெட்டுகள் மற்றும் பயணத்தை எளிதாக்குதல் ஆகியவற்றிற்கான இந்திய ரயில்வே ரயில் ஒன் செயலி கொண்டு வந்தது.
இந்த செயலியில் விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற முடியும். இந்த செயலி வாயிலாக புக் செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். முன்பு R-Wallet மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே தள்ளுபடி கிடைத்து வந்த நிலையில், இனி யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டு என அனைத்து பரிவர்த்தனைகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த தள்ளுபடியை பெற விரும்பும் பயணிகள் முதலில் ரயில் ஒன் செயலியை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே லாகின் செய்து வைத்திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், லாகின் செய்யவில்லை. பெயர், இமெயில், மொபைல் நம்பரை உள்ளிட்டு ஐடி உருவாக்க வேண்டும். அதன்பிறகு, பாஸ்வோர்ட் போன்றவற்றை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். இதன்பிறகு, டிக்கெட் முன்பதிவு என்ற ஆப்ஷனை உள்ளிட்டு, பயண தேதி, புறப்படும் இடம், சேரும் இடத்தை உள்ளிட்டு, உங்களுக்கு டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டும். இதன்பிறகு, உங்கள் பயணத்திற்கான டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். மூன்று சதவீதம் தள்ளுபடி தானாகவே பயன்படுத்தப்படும். உதாரணமாக டிக்கெட் கட்டணம் ரூ.1,000 என்றால், ரூ.15 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் 3 சதவீதம் தள்ளுபடியில் நீங்கள் 985 ரூபாய் செலுத்தினால் போதும். எனவே, ரயில் ஒன் செயலியை பயன்படுத்தி டிக்கெட் தள்ளுபடியை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.






















