மேலும் அறிய

திருச்சியில் என்.ஐ.டி கல்லூரி அறிமுகம் செய்த புதிய வசதிகளுடன் நோயாளிகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட் வாட்ச் மூலமாக, மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின்  இதயத்துடிப்பின் அளவு,  மருந்து உட்கொள்ளும் நேரம் ஆகியவற்றை தகவல் கொடுக்கும் விதமாக வடிவமைக்கபட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி கல்லூரியில் மருத்துவ அணிகலன் கருவிகள் (wearable Device) குறித்த 5 நாள் பயிலரங்கு நடைபெற்று வருகிறது. திருச்சி (NIT) தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மருத்துவ கருவிகள் தொடர்பாக புதிய தொழில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  இதன் முக்கிய அம்சமாக  திருச்சி என்.ஐ.டி கல்லூரி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் மருத்துவ அணிகலன் கருவிகள் தொடர்பான செயற்கை நுண்ணறிவு திறன் (AI) குறித்தும் எதிர்கால பயன்பாடுகள், தரவு சேமிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வுகள், புதிய நுணுக்கங்கள் குறித்து மாணவர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த புரிந்துணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  என்ஐடி இயக்குனர் அகிலா மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாலா ஸ்ரீ ராகவன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் இது குறித்து என்.டி.ஐ இயக்குனர் அகிலா செய்தியாளர்களிடம் கூறுகையில், இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு தொழில்துறையில் எந்தவிதமான மருத்துவ அணிகலன் கருவி உள்ளது. அதனை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த விழிப்புணர்வு கிடைக்கும். 


திருச்சியில் என்.ஐ.டி கல்லூரி அறிமுகம் செய்த புதிய வசதிகளுடன் நோயாளிகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்

மேலும், மாணவர்களுக்கு தொழில் துறையுடன் இணைந்து அனுபவக் கல்வியினை கொடுக்க வேண்டும், மேலும் 
மாணவர்கள் படிக்கும் காலத்தில் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்போது, தொழில் நிறுவனமானது அதற்குண்டான வாய்ப்பை வழங்கும் நிலையில், மாணவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தாமல் அதற்கான காலங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் கல்வியை தொடரலாம் என தேசிய கல்வி கொள்கை அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.டி மாணவர்களுக்காக இதுவரை தொழில் நிறுவனங்களுடன் 40 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார்.


திருச்சியில் என்.ஐ.டி கல்லூரி அறிமுகம் செய்த புதிய வசதிகளுடன் நோயாளிகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்

இதனைத் தொடர்ந்து டேட்டா நெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனம் தங்களது ஸ்மார்ட் வாட்ச் மூலமாக, மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின்  இதயத்துடிப்பின் அளவு, மருந்து உட்கொள்ளும் நேரம் ஆகியவற்றை நோயாளியின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்கள் தவறி கீழே விழுந்தாலோ, அல்லது வீட்டில் இருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் சென்றாலோ அதனை sos மூலம் பதியப்பட்ட குறிப்பிட்ட மொபைல் எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் விதமாக இந்த ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை டேட்டா நெட் டிப்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் அலுவலர்கள் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் சிவகுமாரன் ஸ்ரீ மூர்த்தி பிருந்தா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் டேட்டாநெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை! தமிழக காவல்துறை செயலிழப்பா? அன்புமணி கேள்வி
சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை! தமிழக காவல்துறை செயலிழப்பா? அன்புமணி கேள்வி
மு.க.முத்துவை திட்டிய எம்ஜிஆர்.. கண்டுகொள்ளாத கருணாநிதி.. சிவகாமசுந்தரி வேதனை
மு.க.முத்துவை திட்டிய எம்ஜிஆர்.. கண்டுகொள்ளாத கருணாநிதி.. சிவகாமசுந்தரி வேதனை
Embed widget