மேலும் அறிய

‛பாரத் நெட்’ திட்டம் கையெழுத்தானது: 12,525 கிராமங்களுக்கு இணைய வசதி கிடைக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள 12, 525 கிராமங்களையும் சென்றடையும் வகையில் 50,000 கிலோமீட்டா் தூரத்துக்கு இணையவசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டம் கையெழுத்தானது.

கிராமப்புறங்களில் இணைய இணைப்பு வழங்கிட வகை செய்யும் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, கிராமப்புறங்களில் இணைய இணைப்புக்கான கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதியைக் கொண்டு செல்லும் வகையில் பாரத் நெட் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 12, 525 கிராமங்களையும் சென்றடையும் வகையில் 50,000 கிலோமீட்டா் தூரத்துக்கு இணையவசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

‛பாரத் நெட்’ திட்டம் கையெழுத்தானது: 12,525 கிராமங்களுக்கு இணைய வசதி கிடைக்க வாய்ப்பு!

பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்புத் திட்டமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசுக்குச் சொந்தமான எந்தவொரு இடத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஊரக வளா்ச்சித்துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

‛பாரத் நெட்’ திட்டம் கையெழுத்தானது: 12,525 கிராமங்களுக்கு இணைய வசதி கிடைக்க வாய்ப்பு!

பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டம் என்பது முழுவதும் உட்கட்டமைப்பு சாா்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இணைய இணைப்புக்கான கண்ணாடி இழை கேபிள்களை பூமிக்கு அடியில் பதிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் இன்று காலை கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கும். கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் நிறைவடையும் பட்சத்தில் இணைய இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாரத் நெட் திட்டத்திற்கான ஒப்பந்தம் எல் அண்ட் டி மற்றும் BECIL ஆகிய இரண்டு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரூ.1,815 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்டம் ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் L&T மற்றும் BECIL நிறுவன அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த அதிமுக ஆட்சியில் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு ஏற்பட்டதாக கூறி மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

BSNL free data : வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget