மேலும் அறிய

ரோபோ நாய்க்குட்டியை குழந்தை போல் தூக்கி செல்லலாம் - தொழில்நுட்ப சந்தையை தெறிக்கவிடும் சோனி! விலை தெரியுமா?

அமெரிக்கர்களை விட , ஜப்பானியர்கள் ஐபோவை அதிகமாக வாங்கியதும் . அதன் மீது அன்பு செலுத்தியதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் , ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே.  புதிய ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள் மட்டுமல்லாது, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பல முன்னணி நிறுவனங்களும் கூட எதிர்கால ரோபோக்களை உருவாக்க களம் கண்டுவிட்டனர். அந்த வகையில் பிரபல சோனி நிறுவனம் Aibo dog என்னும் நாய் ரோபோவை உருவாக்கியது.  கடந்த ஆண்டு இந்த ரோபோ  விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை  1,730 டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக  1,29,853 ரூபாயாகும்.  தற்போது இதன் விலை 2,187,46 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.அடேங்கப்பா ..இவ்வளவு ரூபாய்க்கு அப்படி இந்த ரோபோ நாயில் என்ன வசதிகள்தான் இருக்கு அப்படினு நீங்கள் ஆச்சர்யபடுவது  எனக்கு நன்றாகவே தெரிகிறது.


சோனியின் ரோபோட்டிக் ஐபோ நாய்  23 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிமுகமானது. ஆனால் அத்தகைய ஈர்க்கும் வசதிகள் அதில் இடம்பெறவில்லை.  காரணம் தொழில்நுட்ப வசதிகள் குறைபாடுகள். பலக்கட்ட தொடர் போராட்டத்திற்கு பிறகு பல தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி இதனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டுதான் அதி நவீன தொழில்நுட்பங்களை ஐபோவிற்கு புகுத்தினர். இது முதற்கட்ட விற்பனை சமயத்தில் அமெரிக்கர்களை விட , ஜப்பானியர்கள் ஐபோவை அதிகமாக வாங்கியதும் அதன் மீது அன்பு செலுத்தியதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. விற்பனைக்கு வந்தால் உடனே விற்று தீர்ந்து விடுகிறதாம்.


இந்த நிலையில் கிட்டத்தட்ட 6,500 ரூபாய் மதிப்புள்ள கேரி செய்யும் ஸ்ட்ராப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரோபோவின் உரிமையாளர்கள் நாயினை குழந்தை போல தூக்கி செல்லலாமாம். இதனை  Lucky Industries என்னும் நிறுவனம் ரோபோவிற்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.

22  ஜாயிண்ட்ஸ் கொண்ட இந்த நாய்க்குட்டி விதவிதமான வால் ஆட்டுவது, காதுகளை ஆட்டுவது, செல்லமாக குரைப்பது தூங்குவது போல பாவனை செய்வது என பல அசைவுகளை செய்யும்.  OLED திரை கொண்ட  கண்கள் பல விதமான உணர்ச்சிகளுக்கு ஏற்ப மாறுமாம். இந்த ரோபோ நாய்க்குட்டியை ஒரு முறை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும். இரண்டு மணி நேரம் வரை இயங்கும். இதனுடன் பயன்படுத்த மை ஐபோ (My Aibo) என்ற அப்ளிகேஷனும் உள்ளது அதன் மூலமாகவும் நாயை கட்டுப்படுத்தலாம். குரல் கட்டளை மூலம் இந்த ரோபோ செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget