மேலும் அறிய

Centre on Social Media அதையெல்லாம் நீக்குங்க.. சமூக ஊடகங்களுக்கு 6 ஆயிரம் உத்தரவுகள்!

நாடளவில் சமூக ஊடகங்களில் இடப்பட்ட பதிவுகளை நீக்கவேண்டும் என அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு 6 ஆயிரம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது

பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் போக்கு இருந்துவரும் நிலையில், ஒட்டுமொத்த சமூக ஊடகத் தரப்பின் மீது அரசின் பிடி இறுகிவருவதும் உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டில் ஜூன் முதல்வாரம் வரை, நாடளவில் சமூக ஊடகங்களில் இடப்பட்ட பதிவுகளை நீக்கவேண்டும் என அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு 6 ஆயிரம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமே 9,800 உத்தரவுகள்தான் இப்படி அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் 3,600 நீக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலும் இவை ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களே இந்த உத்தரவுகளை எதிர்கொண்டுள்ளன.  

பெரும்பாலும் நீக்கப்பட வேண்டியவையாக அரசுத் தரப்பு குறிப்பிடும் போஸ்ட்டுகள், பொது ஒழுங்கை (சட்டம் ஒழுங்கை அல்ல) சீர்குலைப்பதாக இருப்பதாகவும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69(அ)-வை மீறுவதாக இருப்பதாகவும் காரணம் கூறப்படுகிறது. அண்மையில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினைவாதம், கொரோனா தொற்றை அரசு கையாளும் விதம் ஆகியன தொடர்பாகவே, இந்த ’ஆட்சேபணை’க்கு உரிய பதிவுகள் இருக்கின்றன. இதுவரை முகநூல், ட்விட்டர், யூட்யூப், வாட்சாப், பின் இண்ட்ரெஸ்ட், டெலிகிராம் ஆகிய நிறுவனங்களுக்கு இப்படியான போஸ்ட்களை நீக்கும் உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்கின்றனர் தகவல்தொடர்புத் துறை அதிகாரிகள்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69(அ) பிரிவு, பொது ஒழுங்கையோ இந்திய இறையாண்மை, ஒற்றுமை, இராணுவம், அரசின் பாதுகாப்பு, அயல் நாடுகளுடன் நட்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக சமூக ஊடகப் பதிவுகள் இருந்தால், அவற்றுக்கு எதிராகவும் அந்தக் கணக்கு மீதும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த நிலையில் வாட்சாப், முகநூல், கூகுள் ஆகிய நிறுவனங்கள் தங்களின் முறையீட்டு அலுவலர், இருப்பிட முறையீட்டு அலுவலர், அதிகாரப்பூர்வ தொடர்பு அதிகாரி ஆகியோரின் விவரங்களை வெளியிட்டுள்ளன. ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனம் இந்தியாவுக்கான முறையீட்டு அலுவலராக ஸ்பூர்த்தி பிரியா என்பவரை நியமித்துள்ளது.  

மத்திய அரசுத் தரப்பிலும் சமூக ஊடகப் பதிவுகளையும் கணக்குகளையும் தடைசெய்வதற்காகவே ஓர் அலுவலரை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளனர். இப்போது ஆதார் அட்டை அமைப்பின் துணை தலைமை இயக்குநராக பிரணாப் மொகந்தி பணியாற்றிவருகிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி, உள்விவகாரங்கள், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்கள், கணினி அவசரகால செயல்பாட்டுக்கான இந்தியக் குழு ஆகியவற்றின் அலுவலர்களுடன் கூடி ஆலோசனை நடத்துவார். இந்தக் குழுவானது மத்திய, மாநில அரசுகளின் முகமைகள் அளிக்கும் கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவெடுக்கும்.  

இப்படியான கோரிக்கைகளை ஏற்று அவற்றை அந்தந்த சமூக ஊடகங்களுக்கு அனுப்புவது, அதிகாரப்பூர்வ அலுவலரின் பணி. கடந்த ஆண்டில் மட்டும் 9,849 இணைய முகவரிகள்/ கணக்குகள்/இணையப் பக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதுவே, 2019ஆம் ஆண்டில் 3,603, 2018-ல் 2,799, 2017-ல் 1,385 என தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, அவை நீக்கப்பட்டும் உள்ளன. இதில், முகநூலுக்கு 1,717 ஆணைகளும், ட்விட்டருக்கு 2,731 ஆணைகளும் தரப்பட்டுள்ளன.

சீன நாட்டுடனான உறவில் கசப்பு ஏற்பட்டதை அடுத்து, அந்த நாட்டைச் சேர்ந்த டிக்டாக் முதலிய 250 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது, நினைவிருக்கும். அதையடுத்து விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, ட்விட்டரில், பிரதமரைக் கோத்துவிட்டு பதியப்பட்ட தகவல்கள், கருத்துகளை நீக்குமாறு அரசு கூறியது. அது, பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் என மத்திய அரசு தெரிவித்தது. அதையடுத்து, குறிப்பிட்ட பதிவுகளை அணுகமுடியாதபடி செய்த ட்விட்டர் நிறுவனம், அதை நீக்க மறுத்துவிட்டது. அது, குறிப்பிட்ட பதிவுகளை இட்ட செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் பேச்சுரிமையைப் பறிப்பதாக இருக்கும் என அந்த நிறுவனம் விளக்கம் கூறியது. ட்விட்டரில் 257 கணக்குகளை தடைசெய்யுமாறும் 1178 பேரின் பதிவுகளை நீக்குமாறும் அரசு கூறியது. ஆனால் இதை ஏற்க ட்விட்டர் மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே 2 மாதங்களாக பிரச்னை நீடித்துவருகிறது. இதில் கடந்த ஏப்ரலில் மத்திய அரசு தடைசெய்யக் கூறிய 100 கணக்குகளில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகநூல் பக்கமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Embed widget