மேலும் அறிய

AI artist imagines: நம்மூரிலும் களமிறங்கிய AI.. கொட்டும் மழையில் இருந்து தப்பிக்க இதுதான் வழி.. இணையத்தில் வைரல்

மழையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கியுள்ள எதிர்கால வாகனங்களுக்கான வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

மழையால் பெருநகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றில் இருந்து விடுபட, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கியுள்ள எதிர்கால வாகனங்களுக்கான வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

எங்கும் AI.. எதிலும் AI..

கடந்த சில மாதங்களாகவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான விவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. திரைப்படங்களில் தொடங்கி, அலுவலகத்தில் விடுப்பு விண்ணப்பம் எழுதுவது வரையிலும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு விரிவடைய தொடங்கியுள்ளது.

பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை உள்ளீடாக தந்துவிட்டால், அதற்கேற்ற துல்லியமான முடிவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கி வருகிறது. ஒருதரப்பினர் இதற்கு ஏகோபித்த வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக ஹாலிவுட்டில் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது உள்ளிட்ட பணிகளிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை கண்டித்து எழுத்தாளர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். 

இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:

ஏற்கனவே மேலைநாடுகளை சேர்ந்த நடிகர் நடிகைகள் இந்தியர்களாக இருந்தால் அவர்களது தோற்றம் எப்படி இருக்கும், பெரும் பணக்காரர்கள் ஏழையாக இருந்தால் அவர்களது தோற்றம் எப்படி இருக்கும் என்பது போன்ற பல்வேறு கற்பனையில், செயற்கை நுண்னறிவு தொழில்நுட்பம் வடிவமைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில் தான் இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம், வடிவமைக்கப்பட்ட சில புகைப்படங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manoj Omre (@manojomre)

மழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

இந்தியாவில் மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மழைகாலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவது, கழிவுநீர் கலந்தோடுவது என்பது சாதாரண நிகழ்வாக தொடங்குகிறது. இதனால், மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதை பல நேரங்களில் ஊடகங்களில் காண முடிகிறது. இந்நிலையில் அந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, எதிர்காலத்தில் மழை பாதிப்பில் இருந்து தப்பிக்க, வாகனங்கள் எப்படி வடிவமைக்கப்படலாம் என்பதை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மும்பையை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.

இப்படி எல்லாமா வரும்?

இதுதொடர்பான புகைப்படங்களில் படகு, ஸ்கூட்டர், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ரயில் பெட்டி மற்றும் மினி வேன் ஆகியவை நீரில் பயணிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. அதோடு, மழை நீர் உள்ளே புகாதவாறு வாகனங்களின் மேலே கண்ணாடி குடுவைகள் அமைக்கப்பட்டு இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  மழையில் நனைவதை தவிர்ப்பதோடு, அதிகப்படியான மழைக்காலங்களில் மீட்பு பணிகளில் பயன்படுத்துவதற்கான வகையிலும் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.   இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அந்த நபர், மும்பையில் தற்போதுள்ள சூழலுக்கு இந்த வடிவமைப்பிலான வாகனங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget