மேலும் அறிய

Sachin Gift: புதிய மைதானத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு சச்சின் அளித்த ஸ்பெஷல் பரிசு.. என்ன தெரியுமா?

வாரணாசியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உதவியுடன் மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மைதானத்திற்கான அடிக்கலை நாட்டினார்.

வாரணாசியில் புதிய சர்வதேச மைதானம்:

இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் வெங்சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின்போது பிரதமர் மோடிக்கு சச்சின் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கினார். 'நமோ' என்ற பெயர் பொறிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டது.

அதுமட்டும் இன்றி, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தாங்கள் கையெழுத்திட்ட பேட்டை பிரதமர் மோடிக்கு வழங்கினர். விழாவில் பேச தொடங்கிய பிரதமர் மோடி, 'ஹர் ஹர் மஹாதேவ்' என முழக்கம் எழுப்பி தனது உரையை தொடங்கினார்.

"மகாதேவ் நகரில் உள்ள இந்த மைதானம் ‘மகாதேவ்’வுக்கே அர்ப்பணிக்கப்படும். காசியில் சர்வதேச மைதானம் கட்டினால் இங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெறுவார்கள். இந்த மைதானம் பூர்வாஞ்சல் பிராந்தியத்தின் அடையாளமாக மாறும். ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாடியதற்காக திட்டுவார்கள்.

"உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும்"

ஆனால், அது இப்போது இல்லை. ஒரு பகுதியில் விளையாட்டு உள்கட்டமைப்பு கட்டமைக்கப்படும் போது, ​​அது இளம் விளையாட்டுத் திறமையாளர்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கிறது" என மோடி தெரிவித்தார்.

மோடியை தொடர்ந்து பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரபிரதேசத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முதல் முறையாக வாரணாசியில் கட்டும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு ஆர்வலர்கள் சார்பாகவும் பிரதமர் மோடியை வரவேற்கிறேன்.

வாரணாசியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உதவியுடன் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இது உத்தரபிரதேசத்தின் மூன்றாவது சர்வதேச மைதானம். பிசிசிஐயின் மேற்பார்வையில் கட்டப்பட்ட முதல் சர்வதேச மைதானமாகும். கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் பீகார் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இது ஒரு தளத்தை வழங்கும். உ.பி.க்கு இந்த பரிசை வழங்கிய பிசிசிஐ மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்த மைதானத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, நிலத்தை கையகப்படுத்த, 121 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அதன் கட்டுமானத்திற்காக, 330 கோடி ரூபாய் செலவழிக்கும் என்றும் கூறப்படுகிறது.

30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானம்  கட்டப்பட்டுள்ளது. ஏழு ஆடுகளங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராஜதலாப் பகுதியில் ரிங் ரோடுக்கு அருகில் அமைந்துள்ள இந்த மைதானம் 2025 டிசம்பரில் தயாராகிவிடும்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget