![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
பாரா பேட்மிண்டன் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்க போட்டிக்கு சர்கார் தகுதி..!
டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் அரையிறுதியில் மனோஜ் சர்கார் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்க போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
![பாரா பேட்மிண்டன் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்க போட்டிக்கு சர்கார் தகுதி..! Tokyo paralympics: Indian para Badminton player Manoj sarkar loses to world no.2 player and moves to Bronze medal match பாரா பேட்மிண்டன் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்க போட்டிக்கு சர்கார் தகுதி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/f3eded2cb1166b022ed56cf93101d688_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பாரா பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 5 வீரர்களும் 2 வீராங்கனைகளும் பங்கேற்றனர். அதில் பிரமோத் பகத், மனோஜ் சர்கார், சுஹேஷ் யேத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகிய 5 பேரும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். அத்துடன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்- பாலக் கோலி ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதில் இந்தியாவின் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் அதே எஸ்.எல் 3 பிரிவில் மற்றொரு இரண்டாவது அரையிறுதியில் மற்றொரு இந்திய வீரர் மனோஜ் சர்கார் பிரிட்டன் வீரர் டேனியலை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான டேனியல் பெத்தேலை எதிர்த்து மனோஜ் சர்கார் விளையாடியதால் இது சற்று கடினமான போட்டியாக பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே டேனியல் பெத்தேல் ஆதிக்கம் செலுத்தினார். 17 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை 21-8 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இதைத் தொடந்து நடைபெற்ற இரண்டாவது கேமையும் பிரிட்டன் வீரர் பெத்தேல் 21- என்ற கணக்கில் வென்றார்.
இதன்மூலம் அரையிறுதியில் தோல்வி அடைந்த மனோஜ் சர்கார் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் வீரர் ஃபூஜிஹாராவை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் பிரிவில் ஏற்கெனவே பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் இந்தப் பிரிவில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
#TokyoParalympics, Badminton Men's Singles SL3: Manoj Sarkar loses in semis, to play for bronze.
— ANI (@ANI) September 4, 2021
(File photo) pic.twitter.com/2XJThkVjwn
அடுத்ததாக எஸ்.எல் 4 பிரிவு அரையிறுதி போட்டியில் தருண் தில்லான் பிரான்சு வீரர் லூகஸை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 7.45 மணிக்கு தொடங்குகிறது. அதேபிரிவில் மற்றொரு அரையிறுதியில் இந்திய வீரரும் ஐஏஎஸ் அதிகாரியுமான சுஹேஷ் யேத்திராஜ் இந்தோனேஷிய நாட்டின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டியும் இந்திய நேரப்படி காலை 7.45 மணிக்கு தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு நடைபெறும் எஸ்.ஹெச் 6 பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பிரிட்டன் வீரர் கூம்ஸ் கிரெஸ்டனை எதிர்த்து விளையாடுகிறார். அதைத் தொடர்ந்து பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி இணை கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ஹரி சுசான்டோ-லியானி இணையை எதிர்த்து விளையாட உள்ளது.
மேலும் படிக்க: பாரா பேட்மிண்டனில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் உலக சாம்பியன் பிரமோத் பகத் !
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)