மேலும் அறிய

Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் குழுப் போட்டி : முதல் சுற்றில் இந்தியா வெற்றி !

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் குழுப் போட்டியில் இந்திய அணி முதல் சுற்றில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தியது.

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தீபிகா குமரி, அடானு தாஸ், தருண்தீப் ராய்,பிரவீன் ஜாத்வ் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். கடந்த 23ஆம் தேதி வில்வித்தை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் தீபிகா குமாரி மகளிர் பிரிவில் 9ஆவது இடத்தையும், ஆடவர் குழு பிரிவில் இந்திய அணி 9ஆவது இடத்தையும் பிடித்தது. கலப்பு பிரிவிலும் இந்திய அணி 9ஆவது இடத்தை பிடித்தது. 

 

இந்நிலையில் ஆடவர் குழுப் போட்டி இன்று தொடங்கியது. அதில் இந்தியா சார்பில் அடானு தாஸ், தருண்தீப் ராய் மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் முதல் இரண்டு செட்களையும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி கைப்பற்றினர். அதன்பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட்டை கஜகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதனால் 4-2 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. கடைசி செட்டில் சிறப்பாக வில்வித்தை செய்த இந்திய அணி அதை கைப்பற்றியது. இதனால் 6-2 என்ற கணக்கில் இந்திய வில்வித்தை வீரர்கள் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு நுழைந்துள்ளனர். பின்னர் நடைபெறும் இரண்டாவது சுற்றில் இந்திய அணி  பலம் வாய்ந்த தென் கொரியா அணியை எதித்து விளையாட உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 10.15 மணிக்கு நடைபெற உள்ளது. 

முன்னதாக கலப்பு பிரிவு வில்வித்தையில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். அதில் அவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். காலிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய அணிக்கு எதிராக இந்திய இணை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இந்தச் சூழலில் இன்று ஆடவர் குழுப் போட்டி தொடங்கியுள்ளது. அடுத்து மகளிர் தனி நபர் பிரிவு போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.  அதில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி பங்கேற்க உள்ளார். முதல் போட்டியில் அவர் பூடான் நாட்டைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையை எதிர் கொள்ள உள்ளார்.  

மேலும் படிக்க: வரலாறு படைக்கப்பட்டது.... ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில், வெற்றியுடன் தொடங்கினார் பவானி தேவி !

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget