மேலும் அறிய

Tokyo olympics: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் : டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் சுமித் நகல் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நகல் தோல்வி அடைந்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் நேற்று ஆடவர் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியாவின் சுமித் நகல் முதல் சுற்று போட்டியில், உஸ்பெக்கிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 6-4, 6-7, 6-4  என்ற செட் கணக்கில் சுமித் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

இந்நிலையில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான டெனியல் மெத்வதேவை எதிர்த்து சுமித் நகல் விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே மெத்வதேவ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 30 நிமிடங்களில் 6-2 என்ற வென்றார். அதன்பின்னர் இரண்டாவது செட்டை 36 நிமிடங்களில் 6-1 என எளிதாக வென்றார். இறுதியில் மெத்வதேவ் 6-2,6-1 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நகலை வீழ்த்தினார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் டென்னிஸ் பயணம் முடிவிற்கு வந்துள்ளது. 

ஏனென்றால் நேற்று மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அன்கிதா ரெய்னா ஜோடி பங்கேற்றது. இவர்கள் இருவரும் உக்ரைன் நாட்டின் கிச்னோக் சகோதரிகளை எதிர்கொண்டனர். அந்தப் போட்டியில் சானியா-அன்கிதா ஜோடி 6-0,6-7,8-10 என்ற கணக்கில் உக்ரைன் அணியிடம் தோல்வி அடைந்தது. இதன்மூலம் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸில் ஏமாற்றம் அளித்தார்.

 

இதற்கு முன்பாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சுனிதா ராவ் உடன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்று முதல் சுற்றுடன் வெளியேறினார். 2012 லண்டன் ஒலிம்பிக் ருஷ்மி சக்ரவர்த்தியுடன் இணைந்து சானியா மிர்சா மீண்டும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியா மிர்சா-பிரார்தனா ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தச் சூழலில் இம்முறை சானியா-அன்கிதா ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் இம்முறையும் சானியா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய சார்பில் மகளிர் இரட்டையர் பிரிவிற்கு சானியா-அன்கிதா ஜோடியும், ஒற்றையர் பிரிவில் சுமித் நகல் மட்டுமே தகுதி பெற்று இருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது தோல்வி அடைந்துவிட்டதால் டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவின் பயணம் முடிவிற்கு வந்துள்ளது. இம்முறை கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்க டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் : ஆடவர் இரட்டையர் பிரிவு குரூப் போட்டி சத்விக்-சிராக் தோல்வி !

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget